Skip to main content

க.காதல்... அடுத்தவர் மனைவியை கடத்திய முன்னாள் அமைச்சர் மகன் மீது புகார்

Published on 21/09/2018 | Edited on 26/09/2018
Kidnapping



சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் 35 வயதான விஜய் ராஜஷ் குமார். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு 30 வயதில் ரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். 
 

ரஞ்சனி சென்னை தரமணியில் உள்ள சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு சட்டம் படித்து வந்தார். அதே வகுப்பில் நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த 30 வயதுடைய ரித்தீஷ் என்பவர் படித்து வந்தார்.
 

ஒரே வகுப்பில் படித்ததால் நட்பாக பழகியுள்ளனர். நாளடைவில் ரஞ்சனி மீது ரித்தீசுக்கு காதல் மலர்ந்தது. ரஞ்சனி திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் ரித்தீஷ் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் அவர்களுடைய பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 
 

இரண்டு ஆண்டு காலமாக நீடித்து வந்த இவர்களின் கள்ளக்காதல் விவகாரம், ரஞ்சனியின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் ரஞ்சனியை கண்டித்தார்.  ஆனால் இதை கண்டுகொள்ளாத ரஞ்சனி, ரித்தீசுடன் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
 

இந்த விசயம் தனது பெற்றோருக்கு தெரியவந்ததால் கோபம் அடைந்த விஜய்ராஜேஷ் குமார், மனைவி ரஞ்சனியை சட்டக் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்தது. 
 

வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்று சொல்வதா என கணவரிடம் கோவித்துக்கொண்ட ரஞ்சனி, தனது பெற்றோர் வீடான தஞ்சை பர்மா காலனிக்கு இரண்டு குழந்தைகளுடன் சென்றார். 
 

தஞ்சைக்கு சென்ற விஜய்ராஜேஷ் குமார், மனைவியிடம் சென்னைக்கு வரும்படி பேசியுள்ளார். ஆனால் ரஞ்சனி மறுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருந்த ரஞ்சனியை காணவில்லை. உறவினர்கள் வீடுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் ரஞ்சனியை தேடிப் பார்த்த அவரது கணவர் விஜய்ராஜேஷ் குமார் தஞ்சை மகளிர் போலீசில் புகார் செய்தார். 
 

அதில, தனது மனைவி ரஞ்சனியை முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரித்தீஷ் கடத்தி சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

குடும்பத்துடன் காரில் வந்து ஆடுகள் கடத்தல்; போலீசார் விசாரணை

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Arriving in a car with family and smuggling goats; Police investigation

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித் திறந்து கொண்டிருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து காரில் தூக்கி போட்டுள்ளார். இதேபோல் ஒன்றன்பின் ஒன்று என 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரில் சிலர் ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.