Published on 15/10/2018 | Edited on 15/10/2018

தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கியில் இயக்குநராக பணிபுரிகிறார். டி.எம்.ஏ. மனோகரன். உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உறவினர் ஆவார்.
தற்போது திருவாரூர், மன்னார்குடியில் உள்ள அவரது இல்லம், லாட்ஜ் உள்ளிட்ட ஐந்து இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றுவருகிறது. கிட்டதட்ட ஒரு மணிநேரமாக இந்த சோதனை நடைபெறுகிறது. மன்னார்குடியிலுள்ள ஒரு நிலத்தை சுமார் ஒரு கோடிக்கும் மேலாக விற்பனை செய்துள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவில் அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த வழக்கு தொடர்பாக, சொத்து எப்படி விற்கப்பட்டது, எதனடிப்படையில் விற்கப்பட்டது என்பது தொடர்பாகதான் இந்த சோதனை நடைபெறுகிறது என்பது தெரியவந்துள்ளது.