கடலூரில் தொடர் மழையால் மின் நிறுத்தம்: இயல்பு வாழ்கை பாதிப்பு
கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பகல், இரவு. பாராமல் மழை இடை விடாமல் தொடர்ந்து பெய்துவருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் மின் நிறுத்தம் செய்துள்ளனர். மின் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காளிதாஸ்