மதுசூதனனுக்கு ஆதரவாக கண்டிப்பாக பிரச்சாரம் செய்ய செல்வேன்: நடிகை லதா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கண்டிப்பாக செல்வேன் என நடிகை லதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மதுரையில் இன்று ரசிகர்களின் சார்பாக நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கு பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எம்.ஜி.ஆர் முதன்முதலில் என்னை உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். 1973ல் கட்சி ஆரம்பித்த நேரத்தில் நடிக்க ஆரம்பித்தேன். நான் அதிமுகவிற்காக நிறைய கட்சி நிதியெல்லாம் கொடுத்துள்ளேன்
எம்.ஜி.ஆர் என்னை கட்சி பணியாற்ற அழைத்த பொழுது எனக்கு சிறிய வயதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அதிமுகவில் எம்பி வேட்பாளராக திண்டுக்கல் மாவட்டத்தில் நின்று 35,000 ஓட்டுக்கள் பெற்றுள்ளேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அடையாளம் காட்டினர் அவரும் சிறப்பாகவே செயல்பட்டார்.
அதிமுகவில் ஒரு குடும்பம் தன் ஆதிக்கத்தை நிறைவேற்றியது, தற்போழுது போய் இருப்பது மகிழ்ச்சியே இது மக்களின் கருத்தே. மதுசூதனனுக்கு பிரச்சாரம் செய்ய கண்டிப்பாக செல்வேன். ஜெயலிதாவின் வளர்ப்பு மகள் என்று சொல்லக் கூடிய வரை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதுகுறித்து மதுரை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மதுரையில் இன்று ரசிகர்களின் சார்பாக நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கு பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எம்.ஜி.ஆர் முதன்முதலில் என்னை உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். 1973ல் கட்சி ஆரம்பித்த நேரத்தில் நடிக்க ஆரம்பித்தேன். நான் அதிமுகவிற்காக நிறைய கட்சி நிதியெல்லாம் கொடுத்துள்ளேன்
எம்.ஜி.ஆர் என்னை கட்சி பணியாற்ற அழைத்த பொழுது எனக்கு சிறிய வயதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அதிமுகவில் எம்பி வேட்பாளராக திண்டுக்கல் மாவட்டத்தில் நின்று 35,000 ஓட்டுக்கள் பெற்றுள்ளேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அடையாளம் காட்டினர் அவரும் சிறப்பாகவே செயல்பட்டார்.
அதிமுகவில் ஒரு குடும்பம் தன் ஆதிக்கத்தை நிறைவேற்றியது, தற்போழுது போய் இருப்பது மகிழ்ச்சியே இது மக்களின் கருத்தே. மதுசூதனனுக்கு பிரச்சாரம் செய்ய கண்டிப்பாக செல்வேன். ஜெயலிதாவின் வளர்ப்பு மகள் என்று சொல்லக் கூடிய வரை வன்மையாக கண்டிக்கிறேன்.
சொத்துக்காகவே தற்பொழுது தன் குழந்தை என பலர் வருகிறார்கள். ஜெயலிதாவின் மரணம் பற்றியான சர்ச்சையை தடுத்து நிறுத்த ஒரு புகைப்படமாவது எடுத்து இருக்கலாம். யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் இதில் நடிகர் விலக்கு அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஷாகுல்