Skip to main content

ஆர்.சி புக் இல்லாம அபராதம் கட்ட என்னிடம் பணம் இல்ல.. புக் கிடைக்கும் வரை வண்டியே வேண்டாம்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்த இளைஞர்!!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில்  உள்ள ஒக்கூர் கரூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.  கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அங்கே இங்கே கடன் வாங்கி ஆவுடையார்கோவிலில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனையகத்தில்  புதிதாக இருசக்கர வாகனம் வாங்கினார். அப்போதே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவுக்காக ஆவணங்களையும் கொடுத்தார். 

 

அடுத்த சில நாட்களில் வாகன பதிவு எண் கொடுத்தார்கள் ஆனால் பதிவு சான்று கிடைக்கவில்லை. வாகனம் வாங்கிய இடத்தில் கேட்டால் பதிவு சான்று இன்னும் வரல வந்ததும் தருவோம் என்று பதில் கூறியுள்ளனர். 

 

bike

 

மேலும் வட்டார போக்குவரத்து  அலுவலகத்தில் காலதாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளனர். இப்படி பல நாட்கள் அழைந்த செல்வராஜ் இன்று   அறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றார். இதற்கு முன்பும்  பல முறை ஆர்சி புத்தகம் கேட்டு அலைந்துள்ளார் . ஆனால் அறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று வரை  கிடைக்காதததால் விரக்தியின் உச்சத்திற்கே போன செல்வராஜ்  இன்று ஆர்டிஓ அலுவகத்தில் தனது வாகனம் மற்றும் சாவியை அலுவலகத்தில் ஒப்படைத்தவர் எல்லா ஊர்லயும் வாகன சோதனை நடக்குது நான் ஆர் சி புத்தகம் இல்லாம அடிக்கடி அபராதம் கட்ட வேண்டியுள்ளது. இனி அபராதம் கட்ட என்னிடம் பணம் இல்ல.. அதனால ஆர் சி புக் தரும் வரை வாகனம் என்னிடம் இருப்பதைவிட அலுவலகத்திலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு நடந்து சென்றுவிட்டார். 

 

bike

 

இந்த சம்பவத்தால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் அறந்தாங்கி வட்டார ஆய்வாளர் அசோக்குமார் நாளை ஆர்சி புக் கொடுப்பதாக கூறியுள்ளார்.

  

அறந்தாங்கியில் எந்த அலுவலகம் போனாலும் ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டும் என்பதை கடந்த சில நாட்களாக சிலர் சான்றோடு காட்டி வருகிறார்கள். போன வாரம் வட்டாட்சியர் அலுவகம் இந்த வாரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அடுத்து?

சார்ந்த செய்திகள்

Next Story

கிணற்றில் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Two people loses theri livetrying to pick up a bike that fell into a well

கன்னியாகுமரியில் கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலிங்கம். செங்கல் சூளை தொழிலாளியாக இருந்த ஸ்ரீ லிங்கம் கிணற்றில் விழுந்த பைக்கை எடுப்பதற்காக கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதற்கு பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவனையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

இந்தநிலையில் இருவரும் கிணற்றுள் இறங்கி பைக்கை மீட்க முயன்ற போது பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்ததால் தண்ணீரில் ரசாயன கலப்பு ஏற்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுள் இறங்கி ஸ்ரீலிங்கம் மற்றும் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பைக்கை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய இருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ - பைக் டாக்சிகளுக்கு தடை!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
ban on bike taxis in karnataka

வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் ஊஃபர், ரேபிடோ போன்ற சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த அனுமதியால் தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், அன்றைய அரசு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. அந்த வகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூர் பகுதியில் பைக் டாக்சியில் சென்ற பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. 

இந்த நிலையில், இந்த மின்சார பைக் டாக்சி திட்டத்துக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மின்சார பைக் டாக்சி திட்டம், மோட்டார் வாகன சட்டத்தை மீறுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படுகிறது. மேலும், இந்த இருசக்கர மின்சார வாகனங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. வாகன நம்பர் பிளேட் இல்லாத மின்சார வாகனங்களால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், கர்நாடகாவில் இந்த மின்சார பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.