Skip to main content

குருவின் கடின உழைப்பே பாமகவின் மாபெரும் வளர்ச்சி... நினைவுகளை பகிர்கிறார் ஞானமூர்த்தி

Published on 26/05/2018 | Edited on 26/05/2018

 

வன்னியர் சங்கத் தலைவரும், எனது பொதுவாழ்க்கையின் 16 ஆண்டுகால நண்பருமான காடுவெட்டி குரு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மனதை வருத்துகிறது. அரியலூர் மாவட்டம், காடுவெட்டி குரு அவர்கள் கொஞ்சநாளாக உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் இருந்து 25.05.2018 வெள்ளிக்கிழமை மறைந்தார். 
 

1980ல் இருந்து 1996வரை நானும் அவரும் சமுதாயப்பணியில், இடஒதுக்கீடு போராட்டத்தில் ஒன்றாக பயணித்தோம். 1991ல் நான் பாமகவின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்தபோது அவர் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளராக இருந்து சிறப்பாக பணியற்றியவர். 
 

1991 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் நானும், ஜெயங்கொண்டம் தொகுதியில் துறைராஜும் பாமக சார்பில் போட்டியிட்டபோது தேர்தல் பணியை சிறப்பாக செய்தவர். 


 

guru pmk m.gnanamoorthy



இட ஒதுக்கீட்டு போராட்டங்களான ஒருநாள் சாலைமறியல், ஒருநாள் ரயில்மறியல், ஒருவாரம் சாலைமறியல், தேர்தல் புறக்கணிப்பு, ஜெயங்கொண்டம் நிலக்கரி அனல்மின் திட்ட போராட்டம், இலவச மின்சாரத்தை ஜெயலலிதா நிருத்தியபோது பாமக நடத்திய தூக்குக்கயிறு போராட்டம், காவிரியில் 205 டெம்சி தண்ணீர் விடவேண்டும் என்ற தீர்ப்பின் போது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கன்னடத் தமிழர்களை காக்க புறப்பட்ட போராட்டம் , இலங்கையில் இனக்கலவரம் ஏற்ப்பட்ட போது நடத்திய போராட்டம், நெய்வேலியில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை மற்றும் இழப்பீடு கொடுக்க கோரி நடைபெற்ற போராட்டம், பாமக சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டியார் தாமரைக்கனியால் சட்டமன்றத்தில் தாக்கப்பட்டபோது நடத்திய போராட்டம் என பல்வேறு தளங்களில் நடைபெற்ற போராட்டத்தில் நண்பர் குரு அவர்களின் பணி வியப்புடையதாக இருக்கும். 
 

அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்கு பலமுறை சென்றிருக்கிறார். ஆனால் அதர்க்காக அச்சப்பட்டது இல்லை. ஆரம்ப காலத்தில் பேச்சாற்றல் குறைவாக இருந்தாலும் காலப்போக்கில்  இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் மிகுந்த பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். 
 

அவரின் கடின உழைப்பே அந்த இயக்கத்தின் மாபெரும் வளர்ச்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. 
 

1996ல் அந்த இயக்கத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்ட போதிலிருந்து எனக்கும் அவருக்கும் நெருக்கமும் இல்லை, நட்பும் இல்லை. 
 

2001ல் பாமக சார்பில் அவரும் திமுக சார்பில் நானும் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தலில் தொண்டர்களிடம் கடும் உரசல்வந்து கலவரமாக மாறிவிடக்கூடாது என்பதற்க்காக நாங்கள் சந்திக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டால் ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொள்வோம். வாக்கு எண்ணும் இடத்தில் அவரும் நானும் இருந்தோம் முடிவு அவருக்கு சாதகமாக தெரிந்தது அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு வெளியில் வந்தேன். 
 

சில தேர்தல் கூட்டணி காலக்கட்டத்தில் அவரோடு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறேன். அப்போது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுண்டு. நாங்கள் ஒன்றாக பயணித்த காலத்தில் எங்களுக்குள் இருந்த மதிப்பையும், மறியாதையையும், நட்பு ரீதியான கிண்டல் பேச்சையும் கடைசி வறை கடைபிடித்தோம். 
 

கடைசியாக எனது பெரிய மகள் பல்லவி- இராமச்சந்திரன் திருமணத்திர்க்கு வந்திருந்து வாழ்த்தினார். 
 

அந்த மாவீரனின் மரணம்! என் மன உள்ளத்தின் துயரம்! வீரவணக்கம்!
 

மு. ஞானமூர்த்தி
ஒன்றிய செயலாளர் தி.மு.க.
செந்துறை, அரியலூர் மாவட்டம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது