Skip to main content

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர்; பள்ளி விடுதியில் பரபரப்பு!

Published on 04/09/2024 | Edited on 04/09/2024
Government doctor who incident happened on school children in trichy

திருச்சி மாநகரப் பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சில மாணவிகள், விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சாம்சன். சாம்சன், லால்குடியில்  உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணி புரிந்து வருகிறார். 

இந்த நிலையில், சாம்சன் மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, குழந்தைகள் உதவி மையம் 1098  என்ற எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சாம்சன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மருத்துவம் பார்ப்பது போல் சென்று பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் திருச்சி அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்