Skip to main content

காற்றில் பறக்கும் கரித்துகள்கள்- தனியார் மின்நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் நூதனபோராட்டம்

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
cu


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பத்தில் தனியார் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அனல் மின்நிலையத்திற்கு பின்புறம் புதுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் வசித்து வருகின்றனர். அனல்மின் நிலையத்தில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ரயில்கள் மூலம் நிலக்கரியை இறக்குமதி செய்து போர்போல் மின்நிலையத்தில் வைத்துள்ளனர். அப்படி வைத்துள்ள நிலக்கரித்தூள்கள் காற்றோடு கலந்து புதுக்குப்பம் கிராமத்தில் பரவி குடிநீர் மற்றும் உணவு பொருள்களை  மாசுபடுத்தி வருகிறது. இதுகுறித்து அனல்மின் நிலையம் மற்றும் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் இல்லை.

 

cu1

 

மேலும், இந்த அனல்மின்நிலையத்துக்கு  கடல் வழியா நிலக்கரியை இறக்க துறைமுகம் கட்டும் பணியும் புதுக்குப்பம் கிராமத்தில்  நடந்து வருகிறது.  இந்த துறைமுகத்தால் புதுக்குப்பம் பாதிப்படையும் என்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும், அனல்மின்நிலையத்தை மூட வேண்டும் என்று 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துறைமுகம் பணிகள் நடத்துவரும் சாலையோரம் அமர்ந்து கடந்த இருநாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

am

 

ஞாயிறன்று நடந்த போராட்டத்தில் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் காற்றில் பறக்கும் கரித்துகள்களால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறோம் என்று வாயில் துணியை கட்டிக்கொண்டு நூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடல்வழியாக நிலக்கரி இறக்கும் துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர் போராட்டத்தால் கடந்த ஐந்து நாட்களாக அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

போதைப்பொருள் விற்பனை; கடலூரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

pondicherry police filed case for four cuddalore youngsters 

 

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த கடலூரை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கும் பொருட்டு எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா, எஸ்.பி (கிழக்கு) ஸ்வாதி சிங் ஆகியோரின்உத்தரவின் பேரில் உருளையன்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபுஜி, குற்றப்பிரிவு காவலர்கள் சத்தியவேலு, பிரேம்குமார், செல்லதுரை, மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று (23.03.2023) காலை 07.30 மணியளவில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் சோதனை செய்தபோது, கிழக்கு பக்கமாக அமைந்துள்ள கழிப்பறை அருகில் பொதுமக்களுக்கும், கஞ்சா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்த கடலூர் திருப்பாப்புலியூரை சேர்ந்த குப்புசாமி மகன் ஜீவா என்கிற ஜீவானந்தம் (வயது 23), ராமலிங்கம் என்பவரது மகன் மேகி என்கிற மகேஷ் (வயது 21), வன்னியர்பாளையம் சிவசுப்பிரமணியம் மகன் ரேவந்த் (வயது 25), மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி மகன் ஆதித்தியன் (வயது 26) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1400 கிராம் கஞ்சா அடங்கிய 140 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் சாமலகோட்டையை சேர்ந்த திருப்பதி என்பவரிடம் கஞ்சா இலைகளை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற நடுவர் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.