மேட்டூர் அணை இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடிக்கு தண்ணீர் நிரம்பியது. இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் கே.ஆர்.எஸ், கபினி அணைகளிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு இன்று பகல் 1 மணிக்கு மேட்டூர் அணைக்கு நீர் வந்து விட்டது.
ஏற்கனவே வெள்ள அபாயத்தால் மேட்டூர் அணையிலிருந்து 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அணைக்கு வருகிற உபரி நீர் அப்படியே வெளியேற்ற வேண்டிய நிலை. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையில் முகாமிட்டுள்ளனர். இன்று மாலை முதல் மேட்டூர் அணையில் கூடுதல் நீர் திறக்கப்படுகிறது.
படிப்படியாக 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்படும். இதனால் காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை டெல்டா பகுதி என 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அதிகாரிகள் அதன் அடிப்படையில் சுமார் இரண்டு லட்சம் கன அடி வரும் என்றும் அந்த இரண்டு லட்சம் கன அடி நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டு வீனாக கடலில் கலக்கவுள்ளது.
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சார்ந்த செய்திகள்
Next Story
மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
மேட்டூர் அணையில் நீர் திறக்க உத்தரவு
மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் 4,715 ஏக்கரும், நாகையில் 18,059 ஏக்கரும் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் முதல்வரிடம் நீர் திறக்க கோரிக்கை வைத்திருந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேட்டூரில் பாசனத்திற்கு நீர் திறப்பதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.