Skip to main content

மீனவர் வாழ்வுரிமையை பலிகொடுக்கும் எடப்பாடி அரசு-வைகோ கண்டனம்

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
vaiko

 

தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அழித்தும், மீனவர் வாழ்வுரிமையை முற்றும் முழுதாகப் பலி கொடுக்கின்ற பச்சைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்து வருவது கண்டனத்துக்குரியது என மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

"கடலோர ஒழுங்குமுறை மண்டலச் சட்டம் 1991 இல் கொண்டு வரப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துத்தான், 2011 ஆம் ஆண்டு முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் கடலோரப் பகுதிகளின் மீது கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக இருந்தது. குறிப்பாக, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று விதிகள் கூறுகின்றன. புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது, துறைமுகம் அமைப்பது, நிலம் வாங்குவது, விற்பது, மீன் பதப்படுத்தும் தொழில் உள்ளிட்ட பல தொழில்களுக்கும் தடை விதித்தது. துறைமுகம், சுற்றுலா மேம்பாடு, புதிய கட்டுமானங்கள் கட்டுவதற்கும் கடுமையான விதிகளை அறிமுகம் செய்தன.

 

இந்நிலையில், 2014 இல் சைலேஷ் நாயக் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு இச்சிக்கல்களைத் தீர்க்க 110 பக்க அறிக்கையை மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம்  2015 இல் அளித்தது. இக்குழுவின் பரிந்துரைகளில், ‘கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் பல விதிமுறைகளை மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும்;  சூழலியல் சுற்றுலா, பொதுமக்கள் பயன்பாடு சார்ந்த உள் கட்டமைப்புத் திட்டங்கள், துறைமுகங்கள் மறறும் பாதுகாப்புச் சார்ந்த கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தன. இந்தப் பரிந்துரைகளுக்கு, மீனவ மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். பாரதிய ஜனதா கட்சி அரசு, உருவாக்கி உள்ள ‘சாகர்மாலா’ திட்டத்தைச் செயல்படுத்தவே கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2011, சட்டத்தில் விதிமுறைகளை மாற்றி, புதிய கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கி இருக்கின்றது. மத்திய அரசு, கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் வரைவு அறிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி கருத்துக் கேட்டுள்ளது. மேலும் சுற்றுச் சூழல் துறையின் இணைய தளத்திலும் வெளியிட்டு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கூறியது.

 

மாற்றம் செய்யப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடலோர மேலாண்மைத் திட்டத்தின் மீது, தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களில் தமிழக சுற்றுச் சூழல் துறையின் சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன. பெயரளவுக்கு நடத்தப்பட்ட இக்கூட்டங்களில் தமிழக மீனவர்களும், பொதுமக்களும், கடலோர மேலாண்மைத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இந்நிலையில்தான், தமிழக சுற்றுச் சூழல் துறையின் சார்பில், கடலோர மேலாண்மைத் திடடத்திற்கு ஆதரவாக மத்திய சுற்றுச் சூழல் வனத்துறை மற்றும் பருவ கால நிலை மாற்றத் துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.

 

மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் பருவகால நிலை மாற்றத் துறை நடத்திய 35 ஆவது தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு அரசின் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை அளிக்கப்பட்டு இருக்கின்றது. அதில், இனி மத்திய அரசு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு ஆணை 2006 ன் படி மக்களிடம் கருத்துக் கேட்கும் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பாறைப் படிம எரிவாயு திட்டங்கள் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலத் திட்டங்கள், குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் திட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்றவற்றிற்குப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தத் தேவை இல்லை என்பதை, மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை பருவகால மாற்றத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அழித்து, முற்றும்முழுதாகப் பலி கொடுக்கின்ற  பச்சைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்து இருப்பதைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 

ஜனநாயக நாட்டில் மக்களின் பங்கேற்பும், அனுமதியும் இல்லாத எந்தத் திட்டங்களையும் வலிந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்றால், எரிமலையென மக்கள் கிளர்ந்து எழுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என எச்சரிக்கின்றேன்." என்கிறது அந்த அறிக்கை.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.