Skip to main content

ரயிலில் தீ விபத்து; சென்னையில் பரபரப்பு

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

nn

 

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை கிளம்பியதால் ரயில் பாதியில்  நிறுத்தப்பட்டுள்ளது.

 

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற எல்டிடி (லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ்) அதிவிரைவு ரயில் பேசின் ப்ரிட்ஜ் பகுதியைத் தாண்டி வியாசர்பாடி அருகே சென்று கொண்டிருந்தபொழுது ரயிலின் முன் பகுதியிலிருந்து அதிக அளவு புகை வெளியேறியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரயிலை பாதி வழியிலேயே உடனடியாக நிறுத்திவிட்டு வெளியேறினார். தீ விபத்து ஏற்பட்ட தகவலறிந்து ரயிலிலிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு குதித்து வெளியேறினர்.

 

மின் கசிவினால் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்பொழுது ரயிலானது பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்