Skip to main content

'நாய் கூட இப்போ பி.ஏ பட்டம் வாங்குது; இந்த வளர்ச்சி திமுக போட்ட பிச்சை' - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Even a dog is getting a BA degree now; This development was disputed by DMK's begging'-RS Bharati speech


நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில் நீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவின் மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்ட மேடையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''கம்யூனில் ஜீவோ மூலம் தான் இங்கு நம்மில் பல பேர் டாக்டர்கள். பல பேர் இதை மறந்து விட்டார்கள். ஏதோ குலப்பெருமையால், கோத்திர பெருமையால் டாக்டர் ஆகிவிட்டது போல பேசுகிறார்கள். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதே கிடையாது. மனசுக்கு பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான். இதை நாம் நினைக்க வேண்டும். நான் ஒரு வக்கீல் என்றால் இது என்ன குல பொறுமையால் கோத்திர பெருமையால் வந்ததா? இந்த இயக்கம் போட்டப் பிச்சை. அதை வெளிப்படையாகவே சொல்கிறேன். நான் பி.ஏ பட்டம் பெற்றவுடனே ஒரு பெயிண்டர் ஆள்கிட்ட கொடுத்து ஆர்.எஸ்.பாரதி பி.ஏ என பேர் எழுதி மாட்டினேன். அப்போதெல்லாம் அப்படித்தான் மாட்டுவார்கள். ஊரில் ஒரே பி.ஏதான் இருந்தேன். இப்பொழுது நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. இப்பொழுது யார் வீட்டிலாவது பி.இ என போர்டு தொங்குகிறதா? யார் வீட்டிலாவது பி.ஏ என்று போட்டு தொங்குகிறதா? யார் இந்த வளர்ச்சிக்கு காரணம். அதை அழிக்க நினைப்பதற்கு தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது''என்றார். ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு வெற்றி கிடைக்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அகில இந்திய பேசுபொருளாக மாறி இருக்கிறது. பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எங்களுடைய திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நேரத்தில் இன்று ஜூலை மூன்றாம் தேதி நீட் விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் எனச் சபாநாயகர் உறுதி அளித்ததாகச் சொன்னார்கள்.

ஆனால் நேற்றைய தினமே பாராளுமன்றத்தினை முடித்துக் கொண்டு விட்டுப் போய்விட்டார்கள் என்றால் இதற்கெல்லாம் பதில் சொல்ல பயந்து கொண்டுதான் மோடி ஓடி விட்டார் என்று, நிச்சயமாக எங்களைப் போன்றவர்களுக்கு கருதத் தோன்றுகிறது. உச்சநீதிமன்றம் நீட் தொடர்பான மோசடி, ஊழல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். திமுக எடுத்த முடிவு நல்ல முடிவு என்பதை அனைவரும் இன்று உணர ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் திமுக மட்டும் பேசிக்கொண்டு இருந்தது. இப்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் பேச ஆரம்பித்து விட்டது. ஏன் இன்று காலையில் நடிகர் விஜய் கூட தாமாக முன்வந்து தமிழக அரசின் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிப்பதாக சொல்லி இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழர்களும் இதை ஆதரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இது பேசு பொருளாகி இருப்பதால் நீட் விவகாரத்தில் நல்ல முடிவு வரும்'' என்றார்.

படம்:எஸ்.பி.சுந்தர்

சார்ந்த செய்திகள்

 

Next Story

“நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கூடாது” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
NEET exam results should not be cancelled central govt insistence on the SC

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு இந்த வழக்கின் விரிவான விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இளநிலை நீட் தேர்வில் பெரிய அளவிலான ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் முழு தேர்வையும் ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், “இளநிலை நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது தேர்வை எழுதிய லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு தீவிரமான விளைவுகளை கொண்ட ஆபத்தை ஏற்படுத்தும். அனைத்து போட்டித் தேர்வுகளையும் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 

NEET exam results should not be cancelled central govt insistence on the SC

எந்தவொரு தேர்விலும் வினாத்தாள்களின் ரகசியத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  சில குற்றவியல் கூறுகளின் பேரில் சில குற்றச்செயல்கள் காரணமாக, ரகசியத்தன்மை மீறப்பட்டால் இதற்கு காரணமானவர்களை தண்டிக்கப்படுவதை உறுதிசெய்யவும், அந்த நபர் மீது சட்டத்தின் முன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சதி செய்தல், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என மத்திய அரசு  தனது பிரமாணப் பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Next Story

அதிமுக பிரமுகர் கொலை; திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
AIADMK leader killed; 8 people including DMK executive arrested

சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

AIADMK leader killed; 8 people including DMK executive arrested

இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வார்டு கவுன்சிலரின் கணவரான திமுக நிர்வாகி சதீஷ் அந்தப் பகுதியில் லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சண்முகமும் சதீஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்து லாட்டரி விற்பனை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இவர்களுக்குள் தொழில் மற்றும் அரசியல் ரீதியாகவும் போட்டி ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து விரோதிகளாக இருந்து வந்தனர். இந்நிலையில் சதீஷ் தனிப்பட்ட முறையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததால் அது குறித்து சண்முகம் காவல்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சதீஷ் அதிமுக நிர்வாகி சண்முகத்தை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.