Skip to main content

ஆஜருக்கு மேல் ஆஜர்; அதிமுக வட்டாரத்தை பரபரப்பாக்கிய நீதிமன்றங்கள்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Edappadi Palaniswami ordered to appear in person

அதிமுக கட்சியினுடைய போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் தனக்கும், தன்னுடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றம் கே.சி.பழனிசாமி வழக்கை தள்ளுபடி செய்தது. அதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, தொடர்ந்து வழக்கை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஏற்கனவே மாற்று நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி இருக்கும் நிலையில், மற்றொரு வழக்கில் ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராக சென்னை சார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சார்ந்த செய்திகள்