Skip to main content

‘மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள்’ - பரபரப்பு ஏற்படுத்திய உறவினர்கள்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Doctors here are lying

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ளது மேல்மாம்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயது பழனிவேல். முந்திரி வியாபாரியான இவர் முந்திரி கொட்டைகள் உடைத்து முந்திரிப் பருப்புகளை பதப்படுத்தும் தொழில் செய்து வருகிறார். இதனால் அந்த பகுதி சுற்றுப்பட்டு கிராம மக்களிடம் நன்கு அறிமுகமானவர். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது முந்திரி பருப்பை பதப்படுத்தும் இயந்திரங்களை சுத்தம் செய்து அதன்மீது குழாய் மூலம் தண்ணீர் அடித்து கழுவிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது.

 

இதனால் தூக்கி எறியப்பட்ட பழனிவேல் மயக்கமடைந்துந்துள்ளார். இதைக் கண்டு பதறிப்போன அவரது குடும்பத்தினர் உறவினர்கள் அவரை அவசரம் அவசரமாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பழனிவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேலின் உறவினர்கள் இல்லை.... இல்லை.... .பழனி மயக்க நிலையில் தான் உள்ளார். அவர் இறக்கவில்லை இங்கிருக்கும் மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று கூறியதோடு பழனியை அங்கிருந்து கட்டாயப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

அதன் பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பழனிவேலை பரிசோதனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அவர்களும் கூறியுள்ளனர். இதையடுத்து இறந்த பழனியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் பழனிவேலின் வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதனால் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.