
இன்று காலை மருத்துவக் குழுவினருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசித்தார்.
இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜூன் 30- ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில் மருத்துவக் குழுவினருடன் பொதுமுடக்கம் தொடர்பாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை செய்தார். மருத்துவக் குழுவினருடன் முதல்வர் மேற்கொள்ளும் ஒன்பதாவது ஆலோசனை இது. ஆலோசனையின் முடிவில் மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார்கள். தற்போது முதல்வருடனான சந்திப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.