Skip to main content

அணுக்கழிவு விவகாரம் - பிரதமருக்கு டி.ஆர். பாலு எம்.பி. கடிதம்!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

dmk party DR balu MP to prime minister Letter!

 

கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை அங்குள்ள வளாகத்திலேயே சேமித்து வைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். 

 

அந்த கடிதத்தில், "கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் கழிவை வளாகத்திற்குள்ளேயே சேமிக்கும் வசதியை ஏற்படுத்த இந்திய அணுசக்திக் கழகத்திற்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வக்கிழங்கியுள்ளது. ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகளின் எரிபொருள் கழிவுகளை சேமித்து வைக்க வளாகத்திற்கு உள்ளேயே உருவாக்கப்பட்டுள்ள அமைப்பிற்கு இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை. 

 

அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவுகளை வளாகத்திற்கு உள்ளேயே சேமித்து வைப்பது என்பது அப்பகுதி மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். அணுக்கழிவுகளை அகற்ற பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஆழ்நிலை அணுக்கழிவு மையத்தை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்ட ஆய்வில் அணுக்கழிவை வளாகத்திற்குள் சேமிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. எனவே, அணுக்கழிவுகளை வளாகத்திற்குள்ளேயே சேமித்து வைக்கும் முடிவை கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

போராட்டத்தை அறிவித்த மக்கள்; கூடங்குளம் அணுமின் நிலையம் எடுத்த அதிரடி முடிவு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Kudankulam Nuclear Power Plant Action taken on Examination cancelled

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அணுமின் நிலையம் அமைவதற்காக அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தங்களது நிலங்களைக் கொடுத்துள்ளனர். அதனால், கடந்த 1999 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

மேலும், அணுமின் நிலையம் அமைவதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் 7,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்வு நாளை (03-03-24) நடைபெறவிருந்தது. 

கடந்த 1999 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தைப் புறக்கணிக்கும் வகையில் தேர்வு நடத்தப்படுவதாகவும், அந்த தேர்வை அணுமின் நிலைய நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் எனக் கூடங்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மற்றும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவும் சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக அணுமின் நிலையம் உறுதியாக அறிவித்தது.  

இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறும் என அப்பகுதி மக்கள் அறிவித்தனர். மக்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.