Skip to main content

மு.க.ஸ்டாலின் தலைமையில் மே-28ம் தேதி தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!

Published on 25/05/2018 | Edited on 25/05/2018


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று முழுஅடைப்பு, மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் மே.29ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் மே.28ஆம் தேதி சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைப்பெறும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார். இதுக்குறித்து தி.மு.க. கொறடா சக்கரபாணி கூறியதாவது,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 28ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாலை 5 மணி அளவில் நடைப்பெறும். கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்குமாறு கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்