Skip to main content

தேமுதிக பிரமுகர் வெட்டி படுகொலை!; நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்!!

Published on 19/08/2018 | Edited on 27/08/2018

தலைவாசல் அருகே, வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த தேமுதிக பிரமுகரை நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

murder

 

 

 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (40). விவசாயி. சில ஆண்டுகள் தேமுதிக கிளைச்செயலாளர் பொறுப்பிலும் இருந்தார். இவருடைய மனைவி ஆலயமணி (30) இவர்களுக்கு ராம்குமார் (16), அருண்குமார் (14) என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17, 2018) இரவு ஆலயமணி, தன் இரு மகன்களுடன் திருநள்ளாறுக்கு பஸ்சில் கிளம்பிச் சென்றார். அவர்களை வழியனுப்பி வைத்த கலியமூர்த்தி, அன்று இரவு வீட்டில் தனியாக படுத்துக் தூங்கினார். 

murder

 

 

 

மறுநாள் (ஆகஸ்ட் 18, 2018) காலையில் நீண்ட நேரமாகியும் அவருடைய வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அவருடைய வீடு அருகே வசித்து வரும் சித்தப்பா சந்தேகத்தின்பேரில் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார். கதவு உள்பக்கம் தாழிடாமல் திறந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கே கலியமூர்த்தி, பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 

 

நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கலியமூர்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளது. தலை, கழுத்து, மார்பு, கைகள், வயிறு என முப்பதுக்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால், நிகழ்விடத்தில் இருந்து ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. நோப்ப நாய் மூலம் சோதனை நடத்தியதிலும், தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. 

 

 

இதற்கிடையே திருநள்ளாறுக்குச் சென்ற ஆலயமணியும், அவருடைய மகன்களும் வீடு திரும்பினர். ஆலயமணியிடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார். ஆலயமணி அடிக்கடி கோல்களுக்குச் சென்று வந்துள்ளார். எப்போதும் தனியாகவே சென்றுவிட்டு வீடு திரும்பும் அவர், நேற்று முன்தினம் இரவு தன் இரு மகன்களுடன் திருநள்ளாறுக்குச் சென்றது போலீசாரை யோசிக்க வைத்துள்ளது. சில ஆண்டுக்கு முன்பு, திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தபோது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆலயமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலைபார்க்கும் குமார் என்ற வாலிபருடன் ஆலயமணிக்கு தொடர்பு ஏற்பட்டு, அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

 

 

வீட்டில் கலியமூர்த்தி இல்லாதபோது குமாரை தன் வீட்டிற்கே வரவழைத்து அவருடன் ஆலயமணி நெருக்கமாக இருந்து வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கலியமூர்த்தி கொலை செய்யப்பட்ட அன்றும், அதற்கு சில நாள்கள் முன்பும் அவர் குமார் மற்றும் சிலருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆலயமணியும், கள்ளக்காதலன் குமாரும் சேர்ந்து கூலிப்படையினர் மூலம் கலியமூர்த்தியை தீர்த்துக்கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

 

 

 

இதையடுத்து ஆத்தூர் போலீஸ் டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குமார் மற்றும் சந்தேகத்திற்குரிய மேலும் சிலரையும் நேரில் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, கொலையுண்ட கலியமூர்த்திக்கு யாருடனாவது கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளதா? சொத்துப்பிரச்னை தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளதா? என்ற கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.