Skip to main content

தமிழகத்திலேயே அதிக ஓட்டில் திமுக வெற்றிபெற்ற திண்டுக்கல் தொகுதி! உற்சாகத்தில் உ.பி.க்கள்!!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

அதிமுகவிற்கு அடித்தளம் போட்டதே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிதான். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய உடனே நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் தனித்து போட்டியிட்டார். அப்போது அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை களமிறக்கினார். அப்பொழுது சுயேட்சை சின்னமாக இருந்த இரட்டை இலையில் மாயத்தேவர் போட்டியிட்டதின் மூலம் வெற்றி பெற்றார். 

 

  Dindigul constituency in Tamil Nadu has DMK won the highest number of votes

 

அன்றிலிருந்து இரட்டை இலை சின்னம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வருகிறது. அதை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருக்கும் வரை இந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமலேயே அ.தி.மு.க.வில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது கூட்டணி கட்சிக்கு ஒதுக்காத இந்த தொகுதியை தற்போது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் இந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான பா.ம.க.விற்கு ஒதுக்கியதின் பேரில் ஜோதிமுத்துவை வேட்பாளராக பா.ம.க. அறிவித்தது. இதனால் அ.தி.மு.க. கட்சித் தொண்டர்களும் பெரும் அதிருப்தியில் இருந்தனர். 

 

 

அதோடு தேர்தல் பணியிலும் ஆளுங்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து இருந்து வந்தனர். அதுபோல் தி.மு.க. சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த விவசாயி கட்சியில் சாதாரண தொண்டருமான வேலுச்சாமியை திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக ஐ.பி. பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கழகத் தலைவர் ஸ்டாலின் ஐ.பி.யின் பரிந்துரையின் பேரில் வேலுச்சாமிக்கு திண்டுக்கல் தொகுதியில் போட்டி போட சீட் கொடுத்தார். ஏற்கனவே 1984க்கு பிறகு தி.மு.க. இத்தொகுதியில் போட்டி போட்டதால் உ.பி.க்களும் உற்சாகமாக தேர்தல் களத்தில் பணியாற்றினார்கள். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகள் தி.மு.க வசம் இருந்ததால் இத்தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களான கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளரும், கொறடாவுமான சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் தலைமையிலும் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றினார்கள். 

 

  Dindigul constituency in Tamil Nadu has DMK won the highest number of votes

 

அதன் அடிப்படையில் தான் கடந்த மாதம் 18ம் தேதி திண்டுக்கல் பாராளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற்ற வாக்காள மக்களின் ஓட்டுக்களும் திண்டுக்கல் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. இப்படி வைக்கப்பட்டிருந்த வாக்காள மக்களின் ஓட்டுக்களை தான் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டதின் மூலம் தி.மு.க. வேட்பாளரான வேலுச்சாமி 7லட்சத்து 46ஆயிரத்து 523 ஓட்டுக்களும், அ.தி.மு.க. வேட்பாளரான ஜோதிமுத்து 2லட்சத்து 7ஆயிரத்து 551 ஓட்டுக்களும் வாங்கினார். இதன்மூலம் வேலுச்சாமி 5லட்சத்து 38ஆயிரத்து 972 வாக்கு வித்தியாசத்தில் தமிழகத்திலேயே வேலுச்சாமி அதிக ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றதின் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான வினயிடம் சான்றிதழை பெற்றார். அதை மாவட்ட கழக துணைப்பொதுச் செயலாளர் ஐ.பி. தலைமையில் சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட சில பொறுப்பாளர்களுடன் சென்னைக்கு சென்று கழகத் தலைவர் ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வெற்றி பெற்ற சான்றிதழை கொடுத்து ஆசி வாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. உறுப்பினரான வேலுச்சாமி. 

 

DMK

 

ஆனால் இந்திய அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் வேலுச்சாமி பிடித்து சாதனை படைத்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.விற்கு அடித்தளம் போட்ட திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆத்தூர், ஒட்டன்சத்திரம் சட்ட்மன்ற தொகுதிகளில் டெபாசிட் கூட அ.தி.மு.க. வாங்கவில்லை அந்த அளவுக்கு தி.மு.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று சாதனை படைத்து இருக்கிறது. 

 

 

இப்படி 35 வருடங்களுக்கு பிறகு  திண்டுக்கல் தொகுதியில் உதயசூரியன் உதிப்பதற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தேர்தல் ஆலோசனையின் பேரில் மேற்கு மாவட்டச் செயலாளர் கொறடா சக்கரபாணி, கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் தொண்டர்களின் கடுமையான தேர்தல் பணியின் மூலம்  திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கோட்டையாக உருவாகி இருக்கிறது!.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.