Skip to main content

வெறுப்பை வேரறுக்க அன்பை விதைக்க வேண்டும்! தமிமுன் அன்சாரி பேச்சு!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018
Thamimun Ansari




சென்னையில் வசிக்கும் நாகை வட்டார மக்களை இணைத்து நாகை நலன்புரி சங்கம் என்ற பெயரில் சேவை அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டது.

 

இந்த விழாவில் பங்கேற்று பேசிய நாகை எமஎல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி,

 

நாகை, நாகூர், காரைக்கால் உள்ளிட்ட நாகை கடலோர மாவட்ட மக்களுக்கு என்று தனி பாரம்பர்ய வரலாறு உண்டு. தென்னாசிய அலைகடலில், சொந்த  கப்பல்கள் செலுத்தி பன்னாட்டு வணிகம் செய்தவர்கள் அவர்கள். 

 

அவர்களின் கடல் சாம்ராஜ்யத்தை கண்டு போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகமாவே வியந்தார். அச்சிறப்புமிக்க நம் முன்னோர்களின் கல்லறைகள் இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், மலேஷியா என அங்கெல்லாம் சாட்சியங்களாக இருந்துக் கொண்டிருக்கின்றன.


 

Thamimun Ansari


 

அந்த வரலாற்றின் வழியே நாம் எதிர்காலத்தை நோக்கி புதிய வரலாற்றை படைக்க பயணிக்க வேண்டும். இக்காலம் நெருக்கடிகள் சூழ்ந்ததாக இருக்கிறது. நாம் வாழும் இடத்தின் சூழலை புரிந்து அதற்கேற்ப வாழ்வியலை அமைப்பது தான் புத்திசாலித்தனமானது.

 


வெறுப்பை வேறறுக்க அன்பை விதைக்க வேண்டும். சங்பரிவாரங்களுக்கு 5 சதவீத மக்கள் கூட ஆதரவளிப்பதில்லை. நம்மோடு வாழும் இந்து சமுதாய மக்கள் இணக்கத்தையே விரும்புகிறார்கள். இதைப் புரிந்து சிறுபான்மை சமூக மக்களும் அவ்வாறே பயணிக்கிறார்கள்.

 


கஜா புயல் தாக்கிய பிறகு முஸ்லிம் சமூகம் ஆற்றிய மனிதநேய சேவைகளை எல்லா மக்களும் கிராமம், கிராமமாக போற்றுகிறார்கள். மஜகவின் சார்பில் 10 நிவாரண முகாம்கள் மூலம் 1 1/2 கோடி மதிப்புள்ள உதவிப் பொருள்களை 4 மாவட்டங்களில் வினியோகித்துள்ளோம். 

 

சில இடங்களில் பாஜகவினர், "இந்த, இந்த இடங்களுக்கெல்லாம் கொடுங்கள்" என்று வழிகாட்டினார்கள்.  இதுபோல் மாற்றாரின் உள்ளங்களை அன்பான சேவைகளால்  வென்றெடுக்க வேண்டும். இன்றைய சூழலில் நாட்டுக்கு இதுதான் தேவை.


 

 பல சமூக மக்களிடையே இணக்கத்தையும், அன்பையும் வளர்த்தெடுக்க வேண்டும். அதனால் தான் தீபாவளி, கிருஸ்துமஸ், பொங்கல் ஆகியவற்றுக்கு வாழ்த்து செய்திகளை வெளியிடுகிறோம். மற்றவர்கள் பெருநாள் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். அது உறவை மேம்படுத்துகிறது.



 

Thamimun Ansari




சமுதாய ஒற்றுமையையும், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் கெடுக்க நினைப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும். குறிப்பாக சமூக இணையதளங்களில், பொறுப்பற்றத்தனமாக சிலரும், விளம்பர நோக்கில் சிலரும் பதியும் கருத்துகள் பேராபத்துகளை விளைவிக்கின்றன. இதனால் களத்தில் இறங்கி பணியாற்றுபவர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர்.

 

 அமைதியான சமூக சூழலை உருவாக்க, அரசியல் பேதங்களை கடந்து எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும். நமது நாகை நலன்புரி சங்கம் 5 லட்சம் மதிப்பில் புயல் பாதித்த பகுதிகளில், சாதி மதம் பாராமல் நிவாரணப் பொருள்களை வழங்கியது பாராட்டுக்குரியது.

 

 இச்சங்கம் சார்பில் நாகையில் குறைவான கட்டணத்துடன் கூடிய ஒரு மருத்துவமனையை கட்டி அனைவருக்கும் சேவையாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

 



இந்நிகழ்வில் இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் MGK. நிஜாமுதீன், சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.  சென்னை வாழ் நாகை நலன்புரி சங்க நிர்வாகிகள் பேராசிரியர் ஷேக் அலாவுதீன், முஹம்மது யூசுப் மாலிம், பேராசிரியர் அகமது மரைக்காயர், அப்துல் காதர் மாலிம், ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.