Skip to main content

டெல்லியிலிருந்து வந்த தேர்தல் நிதி! பெர்சனல் அக்கவுண்டில் பதுக்கிக்கொண்ட வேட்பாளர்கள்!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019


                 
                           தேர்தல் என்றாலே பண விளையாட்டுதான். மக்களுக்கும் தொண்டர்களுக்கும் ஏக குஷியை தருகிறது தேர்தல். ஆனால், தற்போதைய தேர்தல், காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருகிறது. 

 

          ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு அதிகபட்சம் 70 லட்சம் வரை செலவு செய்யலாம் என தலைமை தேர்தல் ஆணையம் நிர்ணயத்திருக்கும்  நிலையில், இதெல்லாம் டீ  செலவுக்கு மட்டும்தான் சரியாகும் என ஆவேசப்படுகிறார்கள் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள். அதனால், தேர்தல் ஆணையம் நிர்ணயத்த தொகையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் செலவு செய்ய களமிறங்கியுள்ளனர். அதற்கேற்ப  பண மூட்டைகள் உடையும் சத்தம் எல்லா தொகுதிகளிலும் எதிரொலிப்பதால் பிரதான கட்சிகளின் தொண்டர்களிடம் குதூகலம் கொப்பளிக்கிறது. ஆனால், திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மட்டும் அந்த உற்சாகம் இல்லை.

 

d

             

ஏன், இப்படி? என கதர்ச்சட்டையினரிடம் நாம் காதுகொடுத்தபோது, ‘’ தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ் கட்சி. திருச்சியில் திருநாவுக்கரசு, தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், சிவகங்கையில் ப.சி.யின் மகன் கார்த்திசிதம்பரம், குமரியில் வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் என வசதிபடைத்தவர்கள் களமிறங்கினாலும், தேர்தல் நிதி கேட்டு காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

 


                இதனையடுத்து, 9 வேட்பாளர்களில் 5 பேருக்கு 2 சியும், 2 பேருக்கு 10 சியும் கொடுத்து உதவியிருக்கிறார் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி. சிவகங்கைக்கும் குமரிக்கும் மட்டும் தேர்தல் நிதி இல்லை. இதில் வசதிபடைத்த வேட்பாளர்கள் பல கோடிகளை தொகுதிக்குள் கொட்டி வருகின்றனர். மற்றவர்களோ டெல்லியிலிருந்து தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதையே மறைத்துவிட்டார்களாம். அதிலும் 10 சி வாங்கிய இருவரும் சுமார் 8 சியை பெர்சனல் அக்கவுண்டில் பதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

 

                இந்த நிலையில், திமுகவின் ஒத்துழைப்பு இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என நம்பும் காங்கிரஸ் வேட்பாளர்கள், உடன்பிறப்புகளை செமையாக கவனித்துள்ளனர். அதே கவனிப்பு கதர்சட்டை தொண்டர்களுக்கு இல்லை. முதல் கட்டமாக பூத் கமிட்டிக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்ததோடு, இனியும் தருவதற்கு பணம் இல்லை என முறுக்குகிறார்கள். இதனால் நொந்து போயிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களோ அதிருப்தியடைந்து வருகின்றனர். திருச்சி, தேனி, சிவகங்கை, குமரி தவிர மற்ற 5 தொகுதிகளில் கதர்சட்டையினரின் புலம்பல்கள் காதை துளைத்தபடி இருக்கிறது. இப்படியிருந்தால் காங்கிரஸ் வாக்குகளை அதிமுக கூட்டணி எளிதாக பர்ச்சேஸ் செய்துவிடும் ‘’ என கொந்தளிக்கின்றனர் கதர்சட்டையினர். 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.