Skip to main content

நீட்’டால் தொடரும் மரணம் - மத்திய, மாநில அரசுகளை வறுத்தெடுத்த வைகோ

Published on 06/05/2018 | Edited on 07/05/2018
v a

 

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டித்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.

 

எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத மகனை அழைத்து சென்ற திருத்துறைப் பூண்டி விளக்குடியை  சேர்ந்த  தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு மத்திய,  மாநில அரசுகளின் பொறுப்பற்ற செயலே காரணம் என்றும் கூறினார்.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  நிறுவன தலைவர் வைகோ புதிய பேருந்து நிலையம் அருகில் கட்சிக் கொடி ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி மரக்கன்று நட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

 

vaiko mdmk

 

இந்நிகழ்ச்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் மாநில விவசாய அணி செயலாளர் முருகன் மாவட்டச் செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தவர், ’’தமிழக மக்கள் இந்தியாவின் அனாதைகளா, படிக்க வசதியில்லாத நிலையிலும், குடும்பத்துயரங்களை தாண்டி அரசு தேர்வில் அதிகமதிப்பெண் பெற்ற  அனிதா,பாழாய் பொன நீட் தேர்வில் வெற்றிப்பெற முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டார். அதே போல இன்று மகனை நீட் தேர்வு எழுத தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலம் ஏர்னாகுளத்திற்கு அழைத்து சென்ற தந்தை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் வஞ்சக செயல், மாநில அரசின் கையாளாகாத செயல். 

 

கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு எதிராக, போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. தமிழக மாணவர்களை தமிழகத்திலேயே தேர்வு எழுதவிடாமல் 1000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எழுதவைத்துள்ளனர். 200 கிலோ மீண்டர் தூரம் பயணித்த கலைப்பு, தேர்வு இடத்தை தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து பிள்ளையை தேர்வுக்கு அனுப்பும் வரை ஒவ்வொரு நிமிடமும் பக்பக் என்றே இருந்திருக்கும், அதன் விளைவு மாரடைப்பாகியிருக்கிறது. நீட் க்கு எதிராக போராடிய நாம் இனி தமிழகத்தில் சென்டர் வேண்டும் என போராட வேண்டிய நிலையாகிவிட்டது. 

 

ஆக, மத்திய, மாநில அரசுகளின் திட்டம் லாவகமாக நடைமுறைக்கு வருகிறது’’ என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.