Skip to main content

‘அந்த ஓம்சக்திக்கு கண்ணு இல்லையா’ - உயிரிழந்த அம்மாவை மடியில் வைத்து கதறிய மகன்

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

Crying son holding his dead mother in his lap

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி ஆண்டாள். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

 

முனியன் மற்றும் ஆண்டாள் இருவரும் தங்களது விவசாயத் தோட்டத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது, வயலில் இருந்த பாம்பு ஒன்று ஆண்டாளைக் கடித்துள்ளது. வலியால் துடித்த அவரை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த சிவக்குமார் தாயை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து நண்பரின் உதவியுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 21 கிலோமீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்குச் செல்ல காலதாமதம் ஆனது.

 

மருத்துவமனையில் ஆண்டாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் சிவக்குமார் கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது. தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சி தாங்காமல் கண்ணீர்விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்