Skip to main content

ராணுவ போர் விமானங்கள் கொள்முதல் செய்ததில் வரலாறு காணாத ஊழல்: சு. திருநாவுக்கரசர்

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
thirunavukkarasar



ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்து வருகிற செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற உள்ளதாக சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராணுவ போர் விமானங்கள் கொள்முதல் செய்ததில் வரலாறு காணாத ஊழல் நடைபெற்றுள்ளதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பலமுறை ஆதாரத்தோடு குற்றம் சாட்டியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு நேருக்கு நேராக ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து கடுமையாக உரையாற்றினார். இதற்கு பிரதமர் மோடி எந்தவிதமான பதிலையும் தெரிவிக்கவில்லை.
 

 

 

மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கல் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்த எனது தலைமையில் வருகிற 4.9.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பிரிவுகள் மற்றும் துறைகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
 

 

 

இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர்களாக உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் டாக்டர் ஜி. சின்னாரெட்டி, MLA, சஞ்ஜய் தத், Ex.MLC ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். மிக முக்கியமான இக்கூட்டத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

ராகுல் காந்தியை பிரதமராக்க முழு மூச்சுடன் பாடுபடுவோம்; காங்கிரஸ் தீர்மானம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Congress resolution that we will strive make Rahul Gandhi the Prime Minister

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65ஆவது வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது. திருச்சி  தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை பாராளுமன்ற தொகுதிதி தேர்தல் பொறுப்பாளர் பெனன்ட் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் எம்பி கலந்து கொண்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65 ஆவது வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன ஆணைக்கான கடிதங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அவர்களோடு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நடைபெறவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில், சோனியா காந்தி ஆசியோடு தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, ராகுல் காந்தியை பிரதமராக்க அயராது உழைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு அதிக இளைஞர்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு கிளைகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும். கட்டமைப்பை வலுப்படுத்தினால் கட்சியும் வளரும். எனவே கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து அயராது பாடுபட வேண்டும்” என்றார்.