Skip to main content

சிக்கவைக்கப்பட்ட பணியாளர்கள்... சிக்காத அதிகாரிகள்... அண்ணாமலையார் கோயிலில் ஊழலோ ஊழல்

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்மணி தோறும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து கிரிவலம் செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்து அண்ணாமலையார் – உண்ணாமலையம்மனை வணங்கிவிட்டு செல்கின்றனர்.

கோயிலுக்குள் சுவாமிகளை வணங்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்னு கட்டணம்மில்லா பொது தரிசனம், அடுத்ததாக ஒருவருக்கு 50 ரூபாய் என்கிற கட்டண தரிசனம். பக்தர்கள் தங்கள் வசதிக்கு தகுந்தார்போல் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதன்படி தரிசனம் செய்வார்கள். இதில் கட்டண தரிசனத்தில் மோசடி நடந்துயிருப்பதாக குற்றம்சாட்டி யானை பராமரிப்பாளர் சிங்காரம், இரவு காவலர் பிரேம்குமார் என்கிற இரண்டு தொகுப்பூதிய பணியாளர்களை தற்காலிகமாக நீக்கியுள்ளார் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன்.

 

Corruption at the Annamalayar temple

 

கோயில் யானை ருக்கு இறந்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. அதனால் யானை பராமரிப்பாளராக இருந்த சிங்காரத்தை வேறு பணிகளில் பயன்படுத்திவந்துள்ளனர். அப்படித்தான் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கட்டண மையத்தில் பணியில் இருந்தபோது, கட்டண தரிசனம் செல்லும் பக்தர்களிடம் தலைக்கு 50 ரூபாய் என பணம் வாங்கிக்கொண்டு அதற்கான ரசீது தராமல் அனுப்பியதை ஆய்வின்போது கண்டறிந்து விசாரணை நடத்தி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார் என்கிறார்கள்.

இதுப்பற்றி கோயில் பணியாளர்களிடம் விசாரித்தபோது இன்னும் சில தகவல்களை கூறுகின்றனர். கட்டண ரசீது வழங்கும் இடத்தில் யார் அமர்வது என்பதை கோயில் மணியக்காரர், கண்காணிப்பாளர், மேலாளர் இணைந்து தான் முடிவெடுத்துள்ளார்கள். சிங்காரம் கோயிலுக்கு வரவேண்டிய வருவாய்யை ஏமாற்றினார்கள் எனச்சொல்கிறார்களோ, அதை விட அதிக பங்கு கோயிலில் உள்ள நிரந்தர பணியாளர்கள், அதிகாரிகள் வேறு சிலருக்கு உள்ளது. அவர்கள் தான் இப்படிப்பட்ட போர்ஜரி வேலையை செய்து பணத்தை கொள்ளையடித்துவர்கள், விவகாரம் பெரியதாக ஆனதும் இவர்களை சிக்கவைத்துவிட்டு அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். இரவு காவலாளி பிரேம்குமார் எப்படி பகலில் வந்து கட்டணம் வசூலிக்கும் அறையில் அமர்ந்தார் என்கிற கேள்வி எழுகிறது.

அதேபோல், ரசீது வழங்கினார்களா இல்லையா என்பதை கண்காணிக்க நுழைவாயிலில் ஒரு பணியாளர் இருப்பார். அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணியை சரியாக செய்யாத அவரும் தானே குற்றவாளி என கேள்வி எழுப்புகின்றனர்.

 

Corruption at the Annamalayar temple

 

பக்தகளுக்கு வழங்கிய கட்டண ரசீதில் மட்டும் மோசடி நடத்தி பணத்தை கொள்ளையடிக்கவில்லை. பலப்பல மோசடிகள் நடத்தி கோயில் வருமானத்தை கொள்ளையடிக்கிறார்கள். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான பொருட்கள் வாங்குவதில், பக்தர்களிடம் நிதி வாங்குவதிலும் பெரும் மோசடி நடைபெறுகிறது. அதை விட முக்கியம் 100 பேருக்கு அன்னதானம் எனச்சொல்லிவிட்டு 50 பேர்க்கு தான் போடுகின்றனர். இதில் மற்றொரு கூத்து என்னவென்றால், அதற்கான டோக்கனை கூட 30 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதில் முக்கிய பங்கு கோயிலில் உள்ள முருகனின் மற்றொரு பெயர் கொண்ட அதிகாரிக்கு செல்கிறது.

அதுமட்டும்மல்ல கோயில் எதிரே பலரும் தேங்காய்கடை, பூ கடை என வைத்துள்ளனர். இவர்களிடம் கோயிலின் முன்னால் பணியாளரும், தற்போது ஆளும்கட்சியின் சப்போட்டில் உள்ளவரான அந்த நபர், கோயில் முன் கடை வைத்துள்ளவர்களிடம், நீங்க இங்க கடை வைக்கனும்ன்னா அட்வான்ஸ் தரனும், கடையை காலி செய்யறப்ப அதை திருப்பி தந்துவிடுவன். தரமாட்டன்னு சொன்னா உங்களை இங்கயிருந்து காலி செய்யவச்சிடுவன் என்னோட ஆளும்கட்சி பவர் தெரியும் தானே என மிரட்ட ஒவ்வொருவரும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அட்வான்ஸ் தந்துள்ளனர். அந்த பணத்தை வாங்கி ராசி வட்டிக்கு வெளியே கடன் தந்துள்ளார் அந்த நபர். பணம் தந்தவர்கள் சிலர் தங்களது தேவைக்காக பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். பணத்தை நான் தரும்போது தருவன், பணத்தை தாங்கன்னு நச்சரிச்சி, உங்களை இங்க கடை வைக்கவிடமாட்டன் எனச்சொல்லியுள்ளார். அப்படி சொல்லியும் அந்த வியாபாரிகள் பணத்தை கேட்க, இரண்டு இரும்பு கேட்களை போட்டு அவர்களது வியாபாரத்தை முடக்கியுள்ளார். கோயிலில் உள்ள இந்த இணை ஆணையரும் எதுக்கு அங்க இரண்டு கம்பி தடுப்பு என கேட்கவில்லை என்கிறார்கள்.
 

Corruption at the Annamalayar temple

 

அதேபோல், கோயில் எங்களுக்கே சொந்தம் என்கிற ரீதியில் செயல்படும் முக்கிய சிவாச்சாரியர்கள் குடும்பத்தின் இளைஞன், ஒரு விஐபி குடும்பம் வந்தால் அமர்வு தரிசனம் செய்யவைக்க 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வாங்குகிறான். அந்த பையன், 5 பேர் வந்தால் 2 பேர்க்கு மட்டும்மே சிறப்பு தரிசன ரசீது வாங்கிக்கொண்டு உள்ளே அழைத்து செல்கிறான். இதுப்பற்றி தெரிந்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்புவதில்லை. காரணம் அவர்களுக்கு பங்கு போய்விடுகிறது.

இரண்டு ஆண்டுக்கு முன்பு மகாதீபத்துக்கே கோயிலில் பூ அலங்காரம் செய்யவந்த ஒருவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டி அவர் அலங்காரம் செய்யாமல் போய்விட்டார். இத்தனைக்கும் அவர் இலவசமாக தான் வருடாவருடம் பூ அலங்காரம் செய்துவந்தார். கோயில் அதிகாரிகள், நிர்வாகம் சார்பில் செய்ததாக பணம் எடுத்துக்கொண்டுயிருந்தார்கள். இப்போது கூட கார்த்திகை தீபத்திருவிழா பணிகள் தொடங்கியுள்ளது. கோயில் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு இந்த செலவை நீங்க ஏத்துக்குங்க அப்படின்னு சொல்லி ஒரு கும்பல் விஐபி பக்தர்களிடம் பணத்தை வசூலித்து வருகிறது. உண்மையில் இந்த தொகையெல்லாம் கோயில் கணக்கில் வருவதேயில்லை.
 

இப்படி கோயிலை வைத்து கொள்ளையடித்தபடியே இருக்கிறார்கள் சில கோயில் பணியாளர்கள், அதிகாரிகள், சிவாச்சாரிகள் இதனை கண்டுக்கொள்ளாமல் கண் துடைப்புக்காக இப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம் எனக்காட்டுகிறார்கள் என்றார்கள்.

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். இவர்கள் விட்டால் சிவன் சொத்துக்களை மட்டும்மல்ல சிவானான அண்ணாமலையாரையே விற்பனை செய்துவிடுவார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.