Skip to main content

தமிழகத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கம்!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு காலை 05.00 மணியுடன் முடிந்ததால் டீக்கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 
 

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.

CORONAVIRUS TN GOVERNMENT BUS REDUCED PEOPLES

அதேபோல் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 

தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்