Published on 22/04/2020 | Edited on 22/04/2020
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்துள்ளது. இதில் 635 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
![coronavirus tamilnadu cm palanisamy discussion with doctors](http://image.nakkheeran.in/cdn/farfuture/LzERmTSJtUy5vAfRPi7zfRLEG-4R4AswhP1vhAPGRGk/1587533250/sites/default/files/inline-images/cm2_17.jpg)
இந்த நிலையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஊக்கப்படுத்தும் விதமாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தற்போது சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.