Skip to main content

பொள்ளாச்சி சம்பவம்.. போராடிய மாணவிகள்.. மிரட்டிய அரசு வக்கீல், பளார் விட்ட எஸ்.பி.. போலிஸ் வாகனத்தை மறித்த மாணவிகள்

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி கடல் கடந்தும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

 

கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து காம கொடூரன்களுக்கு எதிராகவும் அவர்களை காப்பாற்ற துடிப்பவர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

 

Pollachi incident .. Students fought ..

இன்று புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி நுழைவாயிலில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பதாகைகளுடன் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அரசு வழக்கறிஞர் ராமநாதன் மாணவிகளிடம் சென்று போராட்டம் நடத்தக் கூடாது உள்ளே போங்கள் என்று மிரட்ட.. பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டங்கள் தொடரும் என்று சொன்னதுடன்..  நீங்கள் யார் எங்களை மிரட்ட என்று மாணவிகள் கேட்க.. நான் பெற்றோர் என்றார். அதன் பிறகும் கல்லூரி கதவுகளை நிர்வாகம் மூடியது. ஆனால் போராட்டத்தை மாணவிகள் தொடர்ந்தனர்.

 

Pollachi incident .. Students fought ..

 

அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி. ஆறுமுகம்.. மாணவிகளிடம் உடனே எல்லாரும் வகுப்புகளுக்கு போங்க என்று அதிகார தொணியில் கூறியதுடன் ஆயிரம் போலிசை கொண்டு வருவேன் என்றார். அதன் பிறகும் மாணவிகள் போராட்டத்தை கைவிடவில்லை.

 

இந்த நிலையில் மாணவிகளுக்கு துணையாக மாணவர்களும் வந்தனர். அப்போது அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ்.. போராட்டக் களத்தில் மாணவிகளை வழிநடத்திக் கொண்டிருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமியை பளார் என அறைந்தார். அடுத்து அருகில் நின்ற போலிசார் மாணவிகளுக்கு துணையாக நின்ற மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலிஸ் வேனில் ஏற்றி வேனை எடுக்க முயன்றனர் போலிசார்.

 

Pollachi incident .. Students fought ..

 

இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவிகள் மாணவர்களை கைது செய்து ஏற்றப்பட்ட வேனை முன்னாலும் பின்னாலும் மறித்து சாலையில் அமர்ந்து போலிசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது பெண் போலிசார் இல்லாமலேயே ஆண் போலிசாரே மாணவிகளை தள்ளினார்கள்.

 

எஸ்பி.யால் தாக்கப்பட்ட அரவிந்தசாமியை சக தோழர்கள் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தகவல் அறிந்த புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து காவல் துறைக்கு எதிராகவும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பொள்ளாச்சி சம்பவத்திற்காக போராடிய அரவிந்தசாமியை தாக்கிய சம்பவம் காட்டுத்தீயாக பரவியதால் நாளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கங்கள் அறிவித்துள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறினார். மேலும்.. பொள்ளாச்சியில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காக மாவட்ட எஸ்.பியே பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை ஊடகங்களிடம் சொல்கிறார். தமிழக அரசு உத்தரவிலும் அந்த பெண்ணின் பெயரை வெளியிடுகிறார்கள். அதன் பிறகு எப்படி புகார் கொடுக்க முன்வருவார்கள் பெண்கள். இப்படி மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களை மிரட்டிவிட்டு இப்ப சி.பி.சிஐ.டி போலிசார் புகார் இருந்தாலும், ஆதாரம் இருந்தாலும் கொடுங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று சொல்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும். முதலில் பிடிபட்ட 4 பேரிடம் இருந்த 10 க்கும் மேற்பட்ட செல்போன்களில் அழிக்கப்பட்ட பதிவுகளை மீட்க வேண்டும். அப்போது தான் முழு உண்மையும் வெளிவரும் என்றவர். இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடிய மாணவர்களை வெறித்தனமாக தாக்கி, இழுத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் நாளை புதுக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகையிடப் போறோம். அதே போல கட்சி தலைமையின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் இந்தச் சம்பவத்திற்காக போராட்டங்கள் நடத்துவோம் என்றார்.

பொள்ளாச்சி சம்பவத்தை முடக்க எத்தனை சம்பவங்களை நடத்துகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.