Skip to main content

போக்குவரத்து காவலர்களை எச்சரித்த முதல்வர் 

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
narayanasamy



புதுச்சேரி மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணித்து, அவர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்கும் திட்டம் தற்போது நடைமுறைபடுத்தபட்டுள்ளது. 
 

இந்நிலையில் சென்னையில் கலைஞரின் சிலை திறப்பு விழாவிற்காக முதலமைச்சர் நாராயணசாமி கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்று கொண்டிருந்தார். 
 

காலாப்பட்டு அரசு பொறியியல் கல்லூரி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டு தன்னுடைய வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அங்கு போக்குவரத்து போலீசார் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பிடித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
 

போலீசாரின் அருகே சென்ற நாராயணசாமி, ஸ்பாட் பைன் நடைமுறைப்படுத்தபடும் விதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஸ்பாட் பைன் என்ற பெயரில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்ளகூடாது என்றும், அதேபோல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை முதல்முறை எச்சரித்து அனுப்பும்படியும், இரண்டாம் முறை பைன் போடும்படியும் காவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சோதனை என்ற பெயரில் பொதுமக்களை சிறமபடுத்துக்கூடாது என்றும் தெரிவித்தார். 

 

பின்னர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களை அழைத்து லைசன்ஸ் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குவது தவறு என அன்பாக அறிவுரை செய்து அவர்களை அனுப்பி வைத்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.