Skip to main content

முன்னாள் மேயர் கொலையில் கைதான கார்த்திகேயன் பாளை சிறையிலடைப்பு

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் கொலை வழக்கில் கைதான கார்த்திக்கேயனை நீதிபதி முன் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து சென்றனர். இதற்கு முன்பாக நெல்லை அரசு மருத்துவமனையில் கார்த்திகேயனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

 

NELLAI MAYOR INCIDENT CASE NELLAI COURT KARTHIKEYAN 15 DAYS REMAND ORDER

 

மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், நெல்லை மாவட்ட நீதிமன்ற J5 நீதிபதி நிஷாந்தினி வீட்டிற்கு அழைத்து சென்று, நீதிபதி முன் கார்த்திகேயனை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து கார்த்திகேயனை 15 நாள் (ஆகஸ்ட் 14) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக கார்த்திகேயனை பலத்தப் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர் காவல்துறையினர்.

 

 


 

சார்ந்த செய்திகள்