Skip to main content

புதுச்சேரியில் 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி தாக்கல்!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்களுக்காக ரூபாய் 7,530 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்தார். அதில் கடந்த ஆண்டை விட புதுச்சேரி அரசு வருவாய் ரூ.505 கோடியாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட நாராயணசாமி புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 2,177 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும்  புதுச்சேரி அரசின் மொத்த கடன் தொகை 7,730 கோடி என்றவர் 2017-18 ஆம் ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தில் தனிநபர் வருமானம் ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார். 


 

Chief Minister Narayanasamy submits Budget for Rs 7,530 crore in Puducherry 2018-19


 

மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் வேளாண்துறை இனி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை என பெயர் மாற்றப்படும். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெறக்கூடிய பயிர்கடனை தவனை தவறாமல் செலுத்தும் விவசாயிகளுக்கு புதுச்சேரி அரசு 4% அரசு மானியமாக செலுத்தி வட்டியில்லா கடன் பெற வழிவகை செய்யப்படும். புதுச்சேரியில் விவசாய பல்கலைக்கழகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்க மாட்டுத்தீவனம், கன்றுத்தீவனம் வாங்க பால் உற்பத்தியாளர்களுக்கு 75 சதவீதம் மாணியம் வழங்கப்படும்.

 

 

 

இந்தாண்டு 550 ஆசிரியர் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிபி.எஸ்.சி.க்கு இணையான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். காரைக்காலில் ரூ.400 கோடிக்கு ஜிப்மர் மருத்துவமனை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். 1.5 லட்சம் வரை வருமானம் பெறும் ஏழை மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சேவை பெறும் வகையில் முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.  


 

Chief Minister Narayanasamy submits Budget for Rs 7,530 crore in Puducherry 2018-19


 

தலைமைச்செயலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட 19 இடங்களில் இலவச வைபை ஏற்படுத்தப்படவுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினை வலிமைபடுத்த 434 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரூ.2 லட்சம் ஆண்டு வருமானம் பெறும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மணப்பெண்களுக்கு வழங்கி வந்த ரூ.75 ஆயிரம் நிதியுதவி ரூ. 1லட்சமாக உயர்த்தப்படும். 

 

ஆகிய திட்டங்களை நாராயணசாமி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து பேரவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.