Skip to main content

சிதம்பரத்தில் சி.எஸ். ஜெயராமன் நூற்றாண்டு விழா

Published on 29/04/2018 | Edited on 29/04/2018
chidambaram jeyaraman

 

முத்தமிழ் இசைச்சித்தர் என்று அழைக்கப்படும் சிதம்பரம் எஸ் ஜெயராமனுக்கு சிதம்பரம் நகரில் அவர் வாழ்ந்த இடமான விளங்கியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அவருடைய மகள் சிவகாமசுந்தரி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் விளங்கியம்மன் கோயில் தெரு முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜன் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் சிலபேர் மட்டும் கலந்து கொண்டனர்.

 

விழாவில் ஜெயராமனின் நூற்றாண்டு விழா மலரை அவருடைய மகள் வெளியிட, சிதம்பரம் நகர பகுதியை சார்ந்த மருத்துவர் நடராஜன், நடராஜர் கோயில் தீட்சிதர் ஐயப்பன் உள்ளிட்டவர்கள் பெற்றுகொண்டனர். பின்னர் அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் பழகியவர்கள் மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினார்கள்.  அப்போது பலர் அவரது நூற்றாண்டு விழாவை குறுகிய வட்டத்தில் நடத்த கூடாது. அவரது கீர்த்தணைகளை இசைகல்லூரி பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவரது குடும்ப உறுப்பினர்கள் விழா எடுக்கவில்லை என்றாலும் அவர் மீதும், இசையிலும் பற்றுகொண்டவர்கள், சிதம்பரம் நகர மக்கள் உள்ளிட்டவர்களை அனுகி உதவி பெற்று பெரிய விழாவாக எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். 

 

இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூன்று நாட்கள் இயல்,இசை,நாடகம் என்ற தலைப்பில் விழா எடுக்கலாம் என்று நடராஜர் கோயில் தீட்சிதர் ஐயப்பன் உறுதி கூறினார். இதனை அனைவரும் ஏற்றுகொண்டனர். நிகழ்ச்சியின் இடை இடையே அவர் பாடிய பாடல்கள் பாடப்பட்டது. கடந்த ஐனவரி 6-ந்தேதி சென்னையில் நூற்றாண்டு விழா நடைபெற்று உள்ளது. இதில் பி.சுசிலா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தநிலையில் அவர் வாழ்ந்த இடத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து தஞ்சையிலும் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.