Skip to main content

செஸ் ஒலிம்பியாட் ஃபீவரில் தமிழ்நாடு! (படங்கள்) 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் செஸ் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்த ஃபீவர் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அந்த துவக்க விழாவிற்காக நேரு உள்விளையாட்டு அரங்கு தயாராகிவருகிறது. அதேபோல்,  சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் சதுரங்கத்தில் வரும், சிப்பாய்கள், குதிரைகள், யானைகள், ராஜா, ராணி போன்ற வேஷங்களிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்