Skip to main content

சென்னை புதுப்பேட்டை குடியிருப்பில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு!

Published on 19/10/2017 | Edited on 19/10/2017
சென்னை புதுப்பேட்டை குடியிருப்பில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு!



சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப் படைக் காவலர் குடியிருப்பில், காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

ஆவடி மற்றும் பரங்கிமலையில் இரு அங்காடிகள் செயல்பட்டு வரும் நிலையில் சென்னை முழுவதும் உள்ளவர்கள் வந்து செல்ல தூரம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது, இதையடுத்து தற்போது புதுப்பேட்டை குடியிருப்பில் அங்காடியை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,

சீருடைப் பணியாளர்களுக்கான இந்த அங்காடியில் காவலர்கள், காவல் அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் 30 சதவீத சலுகை விலையில் பெறலாம் என்று தெரிவித்தார். வடசென்னையில் உள்ளவர்களின் வசதிக்காக சென்னை கொண்டித்தோப்பில் விரைவில் மற்றொரு அங்காடி திறந்து வைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

படங்கள் - குமரேசன்

சார்ந்த செய்திகள்