Published on 20/11/2019 | Edited on 20/11/2019
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்க பாண்டியன், தங்கபாலு, ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றன.
![chennai iit students incident lok sabha mp thirumavalavan write letter for secretary](http://image.nakkheeran.in/cdn/farfuture/PVghvhhEIrBRv66ZXO0L-XjfVBH3j6dI3ds51GAD0o4/1574225916/sites/default/files/inline-images/zero_1.jpg)
இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் மரணம் தொடர்பாக மக்களவையில் பூஜ்ஜியம் நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டு, மக்களவை செயலரிடம் திருமாவளவன் எம்.பி கடிதம் அளித்துள்ளார்.