Published on 28/09/2020 | Edited on 28/09/2020
![Chennai Corporation Action](http://image.nakkheeran.in/cdn/farfuture/cZCBYA8oyE4F_RBJUfTkHIxosgiXo1fW1elrXetFYYc/1601294480/sites/default/files/inline-images/xvxc_1.jpg)
சொத்துவரி செலுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம். ஆனால் சொத்து வரியைச் சரியான காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆண்டுக்கு 2% தண்டத் தொகை செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.