Published on 15/02/2020 | Edited on 15/02/2020
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், " பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது அரசப்பயங்கரவாதம்" என்று தெரிவித்துள்ளார்.