Skip to main content

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் ஒருவர் கைது

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் ஒருவர் கைது

கோவையில் இந்து முன்னனி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய  சுபேரை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு தனிப்படையினர் கைது செய்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

இந்துமுன்னனி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுப்பிரமணியபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து தேடப்பட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன் மற்றும் முபாரக் ஆகிய இருவரைப்பற்றியும் துப்பு கொடுத்தால் பரிசு தரப்படும என தென்னிந்திய முழுவதும் காவல்துறை விளம்பரபடுத்தியது. இதனையடுத்து சதாம் உசேன் மற்றும்  அபுதாகீரை சிறப்பு புலனாய்வு படையினர் கைது செய்தனர். அபுதாகீர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். சதாம் உசேன் கைது செய்யப்பட்டபோது தலைமறைவான கோவை உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியைச்சேர்ந்த சுலைமானின் மகன் சுபேரை காணவில்லை. இதனையடுத்து தேடி சிறப்பு புலனாய்வு படையினர் சுபேரை தேடி வந்தனர்.இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து ஒலவக்கோட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போது பொள்ளாச்சி கோவில்பாளையம் அருகே உள்ள  முள்ளுப்பாடி கேட்டில் வைத்து சிறப்பு புலனாய்வு படையினர்  விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். சுபேர் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒலவக்கோடு அருகேயுள்ள அப்ஹோல்சரி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரை விசாரித்தபின் கைது செய்த சிறப்பு புலனாய்வு படையினர் இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் முன்பு ஆஜர்படுத்தினர். சுபேரை வருகின்ற 26ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதனையடுத்து சிபி ஐடி யின் சிறப்பு தனிப்படயினர் காவலில் சுபேரை எடுத்து விசாரிக்க மனு அளித்தனர்.அதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்போடு சுபேர் மத்தியசிறையிலடைக்கப்பட்டார்.

சார்ந்த செய்திகள்