Skip to main content

ஜொள்ளர்கள் ஜாக்கிரதை! - கண்காணிக்கும் சைபர் கிரைம்!

Published on 25/04/2018 | Edited on 25/04/2018
fake


ஃபேஸ்புக் வாட்ஸ்-அப் என எந்நேரமும் செல்ஃபோனை நோண்டிக்கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களது செயல்பாடுகளை காவல்துறை கண்காணித்துக்கொண்டிருப்பதை மறந்துவிடவேண்டாம். அதுவும், கண்ணை மூடிக்கொண்டு லைக் ஷேர் செய்கிறவர்கள் எப்போது வேண்டுமானாலும் சைபர் கிரைம் போலீஸால் கைது செய்யப்படலாம்!

“தில் இருக்குற ஆம்பளைங்க மட்டும் லைக் & ஷேர் பண்ணுங்க”

“செல்ஃபி புடிச்சிருந்தா லைக் ஷேர் பண்ணிட்டு இன்பாக்ஸ் வாங்க பேசலாம்!”

“நான் வேணுமா...? share பண்ணி comment பண்ணு... whatsapp நம்பர் தரேன்.. பேசலாம்.. நம்பிக்கை இருந்தா share பண்ணு”

“இன்னிக்கி என்னோட பிறந்த நாள்.. வாழ்த்து சொல்ல யாரும் இல்லை நீங்களாவது வாழ்த்தி ஒரு ஷேர் பண்ணுங்க பிரண்ட்ஸ்”

“Nan karuputhan.. friends ah edthupingala???”

“Hai friends முதல் தடவை சாரி கட்டி இருக்கேன் எப்படி இருக்கு...”

“நான் கருப்புதான். என்னை உங்களுக்கு புடிக்குமா? புடிச்சா ஷேர் பண்ணுங்க ஷேர் பண்றவங்களுக்கு மட்டும் நன்பர் தாரேன் பேசலாம்”

”நான் வேணுமா...? share பண்ணி comment பண்ணு... whatsapp நம்பர் தரேன்.. பேசலாம்.. நம்பிக்கை இருந்தா share பண்ணு...”

”என்னை புடிச்சு இருக்கா?

Share பண்ணுங்க Whatsapp குரூப்-ல இணைக்கிறேன்”

“Share pannitu inbox varavangalukku surprise kathutu irukku...”

“நான் auntyஆகிட்டேன் என்னை எல்லாம் உங்களுக்கு புடிக்குமா புடிச்சா குருப்புல ஷேர் பண்ணுங்க ஷேர் பண்றவங்களுக்கு நம்பர் தாரேன் பேசலாம்.

“Deep love பன்ன Boyfriend தேவை.. Like செய்துவிட்டு Share பண்ணுங்க உங்க inbox க்கு நான் வரேன்”- ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்தாலே  பள்ளி-கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் அழகான ஃபோட்டோக்களுடன் இப்படிப்பட்ட பதிவுகளுடன் பல்லிளிக்கும். இதைப்பார்த்ததுமே, பல ஆண்கள் ஜொள்ளிளித்துக்கொண்டு தில்லானவன் என்ற கெத்தை காட்டுவதற்காக அதில், லைக்- ஷேர்- கமேண்ட் இடுவதும் அதில் செல்ஃபோன் நம்பரை போடுவதும் என தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து, நம்மிடம் பேசும் சைபர் கிரைம் அதிகாரி ஒருவர், “இப்படி உலாவரும் ஃபோட்டோக்கள் அந்த பெண்களின் கருத்துகள் அல்ல. அந்த பெண்கள் அப்படி லைக், ஷேர், கமேண்டிட சொல்வதில்லை.
 

fb ii


தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண்கள் கேஷுவலாக பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை சைபர் வில்லன்கள் டவுன்லோடு செய்து ஃபேக் அக்கவுண்ட் ஓப்பன் செய்து இப்படிப்பட்ட கமேண்டுகளை கொடுத்து மிஸ் யூஸ் செய்கிறார்கள். இப்படி, போலியான ஃபேஸ்புக் அக்கவுண்டுகளை ஷேர் செய்தவதால் அந்த சைபர் வில்லனுக்கு வருமானத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறீர்களே… எந்த புண்ணியமுமில்லை. ஏமாற்றங்கள்தான் மிஞ்சும். இப்படி, போலியான ஃபேஸ்புக் பக்கங்களிலிருந்து ஷேர் செய்யப்படும் புகைப்படங்களை லைக், ஷேர், கமேண்ட் கொடுத்து நீங்களும் சைபர் குற்றத்துக்கு துணையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால், சைபர் வில்லன்கள் தண்டிக்கப்படும்போது நீங்களும் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள்?” என்று எச்சரிக்கிறார் அந்த சைபர் கிரைம் அதிகாரியான நமது நண்பர்.

நாளை நமது குடும்பத்து பெண்களின் புகைப்படங்களையும் ஃபேக் அக்கவுன்ட் ஓப்பன் செய்து இப்படிப்பட்ட பதிவுகளை போடுவார்கள். அதனால், இதுபோன்ற பதிவுகளை முகநூல் நண்பர்கள் ஷேர் செய்து சைபர் குற்றத்திற்கு துணை நிற்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ்!

தில் இருக்குற ஆம்பளைங்க மட்டும் லைக் & ஷேர் பண்ணுங்களேன்!!

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.