Skip to main content

'மறுத்ததால் வெட்டி கொன்னுட்டேன்' -மனைவி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

because of refused' - startling information in the case of wife Incident!

 

கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் கணவன், அரிவாள்மனையால் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தோட்டம் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் சுந்தரம் (40). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்தார்.

 

மனைவிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், முதல் மனைவி கோபித்துக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கே நிரந்தரமாகச் சென்று விட்டார்.

 

இதையடுத்து சுந்தரம், தனது இரண்டாவது மனைவி லட்சுமி (30) மற்றும் அவர் மூலம் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தினமும் குடிபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டு வருவதால் சுந்தரத்துக்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இந்த நிலையில் ஜூலை 19ம் தேதி இரவும் அவர் மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போதும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

 

ஆனால் மறுநாள் (ஜூலை 20) பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தபோது, வீட்டுக்குள் லட்சுமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சுந்தரம்தான் அரிவாள்மனையால் லட்சுமியை கழுத்திலும், தாடையிலும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து சுந்தரம் தலைமறைவானார். கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் மலை அடிவாரம் பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுந்தரத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

அவர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ''சுந்தரத்திற்கும் லட்சுமிக்கு தகராறு ஏற்பட்டால் கோபித்துக்கொண்டு லட்சுமி, பழைய பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விடுவார். கோபம் தணிந்த பிறகு வீடு திரும்புவார்.

 

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கணவன், மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட லட்சுமியை, சம்பவத்தன்றுதான் சுந்தரத்தின் தாயார் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

 

சம்பவத்தன்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த சுந்தரத்துடன் லட்சுமி ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் சுந்தரம், மனைவியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு லட்சுமி, விடிந்ததும் கோயிலுக்குச் செல்ல உள்ளதாகக் கூறி உடலுறவுக்கு மறுத்துள்ளார்.

 

சுந்தரம் பலமுறை கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்தார். லட்சுமி மசியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து மனைவியை கழுத்து, தாடை என சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருப்பதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்'' என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

 

பிடிபட்ட சுந்தரத்திடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.