Skip to main content

விவசாய நிலத்தின் நடுவே இருந்த மதுக்கடை, விவசாயிகளின் போராட்டத்தால் மூடல்

Published on 02/05/2018 | Edited on 02/05/2018

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைகோட்டம் கிராமத்தில் விவசாய நிலங்கள் நடுவில் அரசு மதுபானம் கடை திறக்கப்பட்டது.

 

இந்த மதுக்கடைக்கு குடிக்க வரும் குடிகாரர்கள் செய்யும்  அட்டுழியம் அதிகம்.  இதனால் பெண்கள் விவசாய வேலைக்கு செல்ல முடியவில்லை குடித்து விட்டு பாட்டில்களை சில பேர் அருகில் உள்ள வயல் நிலங்களில் போட்டுவிட்டு செல்வதனால் நெல் சாகுபடி செய்யும் பொழுது பாட்டில் காலில் குத்தி சில சமயங்களில் காயம் ஏற்படுகிறது என பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைத்தனர்  

 

tamil

 

மேலும் நெல் அரைக்கும் போது நெல்லுடன் பாட்டில் கண்ணாடி  துகள்கள்  கலந்ததால் உணவுக்கு பயன்படுத்த முடியவில்லை. மேலும்  கடந்த இரண்டு மாதம் முன்பு அந்த இடத்தில் இரண்டு பேர் குடித்து விட்டு சண்டை போட்டதில்  ஒருவர் இறந்து விட்டார்.  இதனால் அருகில் உள்ள கிராமமக்களும்,  விவசாயிகளும்  பல தொடர் போராட்டங்கள் நடத்தினர். மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர்,  வட்டாட்சியர்,  காவல் துறையினர் என தொடர்ந்து  புகார்கள் கொடுத்தனர். 

 

tamil

 

அதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் ஏப்ரல்  28-க்குள் மதுக்கடையை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மே-1 நேற்று வரை மூடவில்லை. அதனால் இன்று கிராமமக்களும், விவசாயிகளும்  மதுக்கடையை மூடக்கோரி கடையை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர். 

தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் ரவிச்சந்திரன்  மதுக்கடையை மூட உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.