Skip to main content

திண்டுக்கல்லில் வங்கி கடன் தருவதாக  ரூ.3 கோடி மோசடி!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
The bank lend Rs 3 crore fraud in Dindigul

 

திண்டுக்கல்லில் கடன் வழங்குவதாகக் கூறி வங்கி மூத்த மேலாளர் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி சொக்கலிங்கம் திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேலிடம் நேற்று கொடுத்த மனுவில், குன்றக்குடி அருகே ஆவிடை பொய்கையில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறேன். திண்டுக்கல் அலகாபாத் வங்கி மூத்த மேலாளர் சொர்ண பிரியா 2017ல் மருத்துவ ஆலோசனைக்காக வந்தார். மருத்துவமனை விரிவாக்கத்திற்கு கடன் வழங்குவதாக கூறினார். விவசாய கடன் என்பதால் வட்டி குறைவாக இருக்கும் என நினைத்து நில பத்திரத்தை கொடுத்தேன். பின் வங்கியில் கணக்கு துவங்கினேன். மூத்த மேலாளர் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்க முடியும் என்றார். ஆனால் ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கினார். மீதி ரூ.44 லட்சத்தை தராமல் இழுத்தடித்தார். என்னுடைய நிலப்பத்திரமும் அவரிடம் தான் உள்ளது. என்னுடைய பெரியல் “ஹெர்பல் ஹேர்” என்ற பெயரில் ரூ.50 லட்சம் கடன் வழங்கியதாக மோசடி செய்து உள்ளார்.

 

sakthivel


மேலும் பலரிடம் ஆவணங்களை வாங்கி கொண்டு ரூ.3 கோடிக்கும் மேல் ஏமாற்றியுள்ளார். அவர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். வாங்காத கடனுக்கு வங்கியில் கடனை செலுத்தும்படி இப்போது கூறுகின்றனர். சொர்ணபிரியா பலரிடம் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுசம்மந்தமாக காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் இந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி அதிரடி விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.