Skip to main content

குரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
kurankani

 

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 

 குரங்கணி தீ விபத்தில் சிக்கி மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில்  ஏற்கனவே சம்பவ இடத்திலேயே 9 பேர் இறந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காததால் 5 பேர் ஆக மொத்தம் 14  பேர் இறந்துள்ளனர். 


     இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரைசேர்ந்த சக்தி கலா மற்றும் சேலம்  எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகியோர் இறந்ததின் மூலம்  குரங்கணி கொழுக்கு மலை தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கவலைகிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்