Skip to main content

கானல் நீராகிவரும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு -  தஞ்சை மக்கள் விரக்தி

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
seeni

 

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை மத்திய அரசும், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சருக்கும் விரும்பம் இல்லை என்றே தோன்றுகின்றது, என்கிறார்கள் தஞ்சை மாவட்ட மக்கள்.

 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதற்காக செங்கல்பட்டு, மதுரை மாவட்டம் தோப்பூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை,  புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி என ஐந்து இடங்களை தேர்வு செய்து 2016 ம் ஆண்டு பார்வையிட்டது. 

 

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏதுவான சில வசதிகளும் இருக்கவேண்டும் என கோரியிருந்தது மத்திய அரசு.  அதில் மருத்துவமனை அமையும் இடம் 200 ஏக்கர் நிலம், அங்கேயே தரமான குடிநீர் வசதி, தேசிய நெடுஞ்சாலை, மாநில தலைநகரை இணைக்கும் ரயில் வழி,மற்றும் வான்வழி போக்குவரத்து  உள்ளிட்டவைகள் கொண்ட இடமாக இருக்கவேண்டும் என கூறி ஆய்வு செய்தனர். 

 

நில ஆய்வின் முடிவில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியே சரியான இடம் என அறிவித்துவிட்டு சென்றனர். அந்த இடத்தையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சட்டசபையில் அறிவித்திருந்தார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும், என கூறியுள்ளார்.

ஆனாலும் மத்திய அரசு ஆய்வை மேற்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, மாநில அரசோ மருத்துவமனை அமையும் இடத்தை காட்டிவிட்டோம் அனுமதி அளிப்பது மத்திய அரசின் வேலை என்கிறது, மத்திய அரசோ இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தின் மூலம் கேட்டிருக்கிறது.  இரு அரசுகளின் கருத்தில் முரன் இருப்பதை பார்க்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கிடைக்குமா, குறிப்பா தஞ்சைக்கு கிடைக்குமா என்கிற கேள்வி எழுகிறது என்கிறார்கள் செங்கிப்பட்டியை சேர்ந்த சமுக ஆர்வலர்கள்.

 

இது குறித்து ஏற்கனவே பல போராட்டங்களை நடத்திவிட்டனர்.  அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகிவரும் சிபிஎம் கட்சியினரிடம் கேட்டோம்,"  மத்திய அரசு தமிழகத்தை தொடரந்து மாற்றாந்தாய் பிள்ளையாகவே புறக்கனிக்கிறது. இடம் தேர்வு செய்து மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது, ஆனாலும் எந்த இடத்தில் மருத்துவமனை அமைக்க இருக்கிறோம் என அறிவிக்கமறுக்கிறது, மத்திய அரசின் தமிழக ஆதரவாளர்களோ மாநில அரசு தான் அலட்சியம் செய்கிறது என குறைசொல்கிறார்கள். மாநில அரசோ இடம் காட்டவேண்டியது தான் எங்களின் வேலை அதை செய்துவிட்டோம், அனுமதி வழங்குவதும், நிதி ஒதுக்குவதும் மத்திய அரசின் வேலை என்கிறார்கள். அவர்களின் இந்த போக்கை பார்க்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை கனவாகவே முடிந்துவிடும் போலிருக்கிறது,  தமிழகத்தை இதிலும் புறக்கனித்துவிடுவார்களோ என்கிற அய்யம் ஏற்படுகிறது, அடுத்தக்கட்டமாக  பெரும் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம், எம்,ஜி,ஆர்  ஆட்சி காலத்தில் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவித்தபோது, செங்கிபட்டியில் தான் தலைமை செயலகம் அமையும் என்றார்.  அவ்வளவு வசதிகள் கொண்ட பகுதி, மத்திய அரசு உடனே எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கவேண்டும்,"என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு!

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Pm modi opens AIIMS Hospital in Jammu

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஐ.ஐ.எம், மின்சார ரயில் சேவை உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று (20-02-24) திறந்து வைக்கிறார். 

எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்ததை தொடர்ந்து, மவுலானா பகுதியில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 32,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம், கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். 

ஜம்மு காஷ்மீரில், பிரதமர் வருகையையொட்டி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஆணவக் கொலை! - பெண்ணின் தந்தை கைது

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
tanjore girl passes away case father arrested by police

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில், இவர்களது காதல் ஐஸ்வர்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. மேலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.