Skip to main content

புயல் பாதித்த கிராமத்தில் மரக்கன்று கொடுத்த தல ரசிகர்கள்

Published on 10/01/2019 | Edited on 10/01/2019
a

 

  ஒரு நடிகர் படம் வெளியாகிறது என்றால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது. இன்று ஒரே நாளில் ரஜினியின் பேட்ட படமும் தல அஜித்தின் வஸ்வாசம் படமும் வெளியானதால் எங்கும் ஒரே பரபரப்பு. மேளதாளம், பட்டாசு, பால் அபிஷேகங்கள் வழக்கம் போல நடந்தது.

 

a


  சில இடங்களில் விஸ்வாசம் ரசிகர்கள் கள்ள டிக்கெட்டில் படம் பார்த்தது முதல் கட்-அவுட் சரிந்து விபரீதம், டிக்கெட் எடுக்க பணம் தராத தந்தையை தீ வைத்த தகாத சம்பவங்களையும் தல ரசிகர்கள் செய்திருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த  கிராமத்தில் மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

 

   புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்  வடகாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமத்திலும் புயல் பாதிப்பால் அதிகமான அளவில் மரங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடகாடு பகுதி அஜித் ரசிகர்கள் பேட்டைக்கு இணையாக பதாகைகள் வைத்தாலும் படம் வெளியான இன்று வடகாடு கடைவீதியில் மரக்கன்று நட்டதுடன் அப்பகுதி பொதுமக்களுக்கு சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்கள்.   


இனிப்பு கொடுப்பது வழக்கம்.  ஆனால் விஸ்வாசம் திரைக்கு வரும் போது  புயலால் மரங்களை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு எங்களால் முடிந்த ஒரு மரக்கன்று கொடுக்கிறோம் என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய முஹமது சமி! நியூஸிலாந்து மேட்சில் இல்லாதது குறித்து பரபரப்பு பின்னணி! 

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அடிக்கடி பெண்கள் பிரச்சனையில் மாட்டிக்கொள்வது வழக்கம். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்தது குறிப்படத்தக்கது. இந்நிலையில் முகமது ஷமி ட்விட்டரில் ஒரு இளம் பெண்ணுக்கு மெசேஜ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cricket



இவரது மெசேஜ்க்கு அந்த பெண் நேற்று ட்விட்டரில் அவருக்கு ஒரு ரிப்ளை ட்வீட் செய்துள்ளார். அதில் அந்த பெண் 1.4 மில்லியன் பேர் என்னை பின்பற்றி வருகின்றனர். ஒரு கிரிக்கெட் வீரர் ஏன் எனக்கு தொடர்ந்து மெசேஜ் செய்து வருகிறார் என்று ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த டீவீட் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பெண் செய்த டிவீட்டால் தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெறவில்லை எனவும் சில ரசிகர்கள் முகமது ஷமியை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story

கல்குவாரியில் வெடி விபத்து -ஒருவர் பலி 

Published on 06/01/2019 | Edited on 06/01/2019
f

 

புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டி அருகே நக்கீரர்வயல் கிராமத்தைச் சேர்ந்த  வேலு என்பவருக்கு சொந்தமான ராஜராஜ சோழன்  என்ற கல்குவாரி உள்ளது. இங்கு பாறைகள் உடைக்கும் பணியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிளார்கள் வேலை செய்து வருகின்றனர். பாறைகள் உடைக்கபயங்கரமான வெடிகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அப்பகுதி குவாரிகள் தடைசெய்யப்பட்ட வெடிகளை பயன்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறனாலும் நடவடிக்கை இல்லை.. இந்த வெடிகளால் பழமையான திருவேங்கைவாசல் கோயில் உள்பட பல கோயில்கள் விரிசல்விட தொடங்கியுள்ளது.

 

 இந்த நிலையில் சில நாட்களுக்கு  முன்பு குவாரியில் கற்களை எடுக்க அந்த குவாரியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வெடி வைத்துவிட்டு திரும்பியுள்ளார்.

 

இந்நிலையில் இன்று காலை கல்குவாரியில் வைத்த வெடி வெடித்து விட்டதா என்று பார்ப்பதற்காக கல்குவாரியில் பணிபுரியும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சேதுபதி மற்றும் சின்னத்துரை உள்ளிட்ட இருவர் கல்குவாரிக்கு சென்றுள்ளனர். கல் குவாரியில் வைத்த வெடி முழுமையாக வெடிக்காமல் இருந்துள்ளது, இதனையடுத்து சேதுபதியும் சின்னதுரையும் அதை சோதித்து பார்க்கும் போது வெடி வெடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சேதுபதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில்  படுகாயமடைந்த சின்னத்துரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


  அடிக்கடி அப்பகுதியில் கல்குவாரிகளில் வெடி விபத்து நடப்பது வழக்கமாகிவிட்டதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறுகின்றனர்.