Skip to main content

‘உலக அதிசயம்’லட்சியம்! நிறைவேறிய சரத்குமாரின் காமராஜர் மணிமண்டப கனவு!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

மதுரை-  திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி அருகில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியிருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இம்மணிமண்டபத்தை, காமராஜரின் 117-வது பிறந்த தினமான இன்று,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது. அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாஃபா பாண்டியராஜன், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.  

 


தலைமைச் செயலகத்தில் பேசிய ராதிகா “தன் வாழ்நாளில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பதை லட்சியமாகக் கருதி, அதற்காக உழைத்து, உருவாக்கிக் காட்டியிருப்பவர் சரத்குமார். அவருடைய கனவு நனவானதை மிகுந்த மகிழ்ச்சியோடு இன்று நான் பார்க்கிறேன். சரத்குமாரின் மனைவி என்ற முறையிலும், நீண்ட நாள் நண்பர் என்ற உரிமையோடும், இந்த உணர்ச்சி மிக்க நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் அனைவரையும் அவர் சார்பிலும், என் சார்பிலும் அன்புடன் வரவேற்கிறேன்.” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய வரலட்சுமி “எனது தந்தை சரத்குமாருக்கும், அவருடைய அறக்கட்டளை சார்பில் எல்லாருக்கும் நன்றி கூறுகிறேன்.” என்றார்.

 

 

ACTOR SARATHKUMAR  Kamarajar Manimandaba's dream

 

 

இதே வேளையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,  பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்,  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  ஆகியோர் காமராஜர் மணிமண்டப விழாவை நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள், காமராஜர் விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நேற்று மணிமண்டப வளாகத்தில் தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிய சரத்குமார், இன்று  விழா மேடையில் பேசிய “பெருந்தலைவர் சிலையையும், அணையா தீபத்தையும், நீரூற்றையும், மணிமண்டபத்தையும் முன் வந்து மகிழ்ச்சியோடு திறந்து வைத்திருக்கின்ற முதலமைச்சருக்கும், தொழிலதிபர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி.” என்றார். 

 

 

ACTOR SARATHKUMAR  Kamarajar Manimandaba's dream

 

 

ராதிகா கூறியது போல், இம்மணிமண்டபத்துக்காக சரத்குமார் உழைத்ததன் பின்னணியையும், அவருடைய பங்களிப்பையும் பார்ப்போம்! 12 வருடங்களுக்கு முன், 2007 ஏப்ரல் 29- ஆம் தேதி காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய சரத்குமார் “22 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மணிமண்டபம் உலக அதிசயங்களில் ஒன்றாகப் பேசப்படும். வெறும் நினைவு மண்டபமாக இல்லாமல், மிகப்பெரிய நூலகம், ஆஸ்பத்திரி, தியான மண்டபம், யோகா மையம், இளைஞர்கள், மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கணினி மையம் போன்றவை இங்கே அமைக்கப்படும்.” என்று அறிவிக்கவும் செய்தார். அடிக்கல் நாட்டு விழாவானது,  நாடார் அமைப்புகள் கொண்டாடிய குடும்ப விழாவாக அப்போது அமைந்தது.

 

 

ACTOR SARATHKUMAR  Kamarajar Manimandaba's dream

 

 

 

சரத்குமாரை திமுக ஓரம் கட்டியிருந்த நிலையில், அன்று கூடிய கூட்டம் அவருக்குத் தெம்பளித்தது. அடுத்த நான்கு மாதங்களில், 2007, ஆகஸ்ட் 31- ஆம் தேதி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். எர்ணாவூர் நாராயணன், கரு.நாகராஜன் போன்ற நாடார் பேரவையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் ச.ம.க.வுக்குள் ஐக்கியமானார்கள். பின்னாளில் விலகியும் சென்றனர். எர்ணாவூர் நாராயணனோ, ச.ம.க.வை உடைத்து சமத்துவ மக்கள் கழகம் என்ற புதுக்கட்சியை 2016-ல் தொடங்கினார். தமிழகத்தின் இருபெரும் திராவிட கட்சிகளும், சரத்குமாரை ’ரசிக்காத’ நிலையில், காமராஜர் மணிமண்டப சிந்தனை மீண்டும் உயிர்பெற்றது. “ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். மணிமண்டப பணிக்கு 1 ரூபாய் நன்கொடை அளித்தாலும் பெற்றுக்கொள்வோம்.” என்றெல்லாம் கூறி, வெகு பிரயத்தனப்பட்டிருக்கிறார். மணிமண்டப பரப்பளவு சுருங்கிவிட்ட போதிலும்,  பிற்காலத்திலாவது உலக அதிசயங்களில் ஒன்றாக காமராஜர் மணிமண்டபத்தை அமைத்தே ஆகவேண்டும் என்ற தனது லட்சியத்தில் உள்ளுக்குள் இன்னும் உறுதியாகவே இருக்கிறார் சரத்குமார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.