Skip to main content

பைனான்ஸ் நிறுவனத்தில் திருட்டு முயற்சி!

Published on 04/12/2017 | Edited on 04/12/2017
பைனான்ஸ் நிறுவனத்தில் திருட்டு முயற்சி!

தேனி மாவட்டம், எடமால்தெரு அருகே உள்ள யோகஷேமம் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு திருட்டு முயற்சி நடந்துள்ளது.



அடையாளம் தெரியாத மர்மநபர், நிறுவனத்தின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த இரண்டு லட்சம் பணம் மற்றும் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளது கடையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட பைனான்ஸ் நிறுவனத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மோப்ப நாயின் உதவியுடன் மர்மநபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். தேனி மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களும் கொள்ளை முயற்சிகளும் நடைபெற்றுவருவதை காவல்துறை கவனத்தில் எடுத்துக்கொண்டு சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

- சக்தி

சார்ந்த செய்திகள்