Skip to main content

ஆசை காட்டி மோசம்; ஆட்சியரிடம் 3 பெண்கள் பரபரப்பு புகார்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

3 women complained to the collector alleging money fraud

 

திருச்சி தில்லை நகர் பகுதியில் இயங்கி வரும் ரைட் சிட்டி என்ற நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அளிக்கும் பணத்தை இரண்டே வருடங்களில் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறியதை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டு தேவசேனா என்பவர் ரூபாய் 82 லட்சம் பணத்தை அந்நிறுவன உரிமையாளர்களான சுகன்யா கிருஷ்ணமூர்த்தி, கமலவேணி சதீஷ், ரிவானா பேகம் ஆகியோரிடம் வழங்கினார். 

 

இந்நிலையில் 5 வருடங்கள் ஆகியும் பணம் திரும்பத் தரப்படாததால் பாதிக்கப்பட்ட தேவசேனா, தேவிகா, ஷில்பா கண்ணன்ராஜ் ஆகியோர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தங்களை ஏமாற்றி வாங்கிய ஒன்றரை கோடி பணத்தை மீட்டுத் தரக் கோரியும் மனு அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்