Skip to main content

சென்னையில் ரயில் விபத்தில் 5 பேர் பலி

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
rayil

 

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய 5 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள்.

 

எழும்பூரில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சார ரயிலில் பரங்கிமலை ரயில் நிலையத்தில்   அதிக கூட்டத்தால் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர். இதில் சிலர் கீழே விழுந்து காயமுற்றனர்.  மேலும், கூட்ட நெரிசலால் தொங்கிக்கொண்டே செல்ல முற்பட்டபோது தடுப்பு தூணில் மோதி  5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.   

 

கோடம்பாக்கத்தில் மின்கேபிள் அறுந்ததால் புறநகர் ரயில்சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப் படுகின்றன.   இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்களில் கடும் ஜன நெருக்கடி நிலவுகிறது.  இந்த நெருக்கடியை சமாளிக்க அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்து கூடுதல் ரயில் செல்ல வழி ஏற்படுத்தாததால் 5 பேர் பரிதாபமாக பலியானதாக சக பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்