Skip to main content

1996 ஆம் ஆண்டு சம்பவம்- வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்திற்கு வந்த சிக்கல்

Published on 10/04/2025 | Edited on 10/04/2025
1996 incident - Trouble came to the Veerapandi Arumugam family

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டிருந்ததை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 1996 ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் தன்னுடைய பதவி காலத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

அதனடிப்படையில் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய மனைவிகள் லீலா, ரங்கநாயகி, மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள் பிருந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தங்களுடைய குடும்பத்தினரை விடுவிக்கக்கோரி வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் விடுதலை செய்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், 'சேலம் நீதிமன்றம் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உரிய சாட்சி விசாரணைக்கு பிறகு அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார்களா இல்லையா என்பது இறுதி விசாரணையில் தெரிய வரும். ஆரம்பக் கட்டத்திலேயே அவர்ளை வழக்கிலிருந்து விடுவித்த சேலம் நீதிமன்றத்தின் உத்தரவு தவறு. மீண்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சேலம் நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவுகளை மேற்கொண்டு முறைப்படி விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்